அகத்தியர் பன்னிருகாண்டம் 276 - 280 of 12000 பாடல்கள்


276. தாமான நசகாண்டங் கண்டபின்பு
    சார்பான அசுவகாண்ட மறியவேண்டும்
வாமென்ற பூரண சூத்திரந்தா நூறு
    வண்மையுள்ள யிருநூறு மறிவேண்டும்
தாமென்ற பெருநூ லாயிரந்தானப்பா
    தாக்கான கருக்கிடையு மைநூறுமாகும்
மேமென்ற கரிசலையு முன்னூறு வேண்டும்
    வியர்வான சொந்தூர முன்னூறும்பாரே.

விளக்கவுரை :


277. பாரேதான் கருக்கிடையா மைநூறுமாகும்
     பாங்கான பாண்டுவைப்பு வறுநூறும்பார்
நேரேதான் செனகாறு நூறும்பாரு
    நேரான கமலம் ஆயிரம்பார்
கூரேதான் சட்டமுனி யெண்ணூறும்பார்
    குறிப்பான கபிலரது காவியம்பார்
சீரேதான் சிந்தாமணி ஆயிரம்பார்
    சிறப்பான யந்நூலாம் வேதமாமே.

விளக்கவுரை :


278. வேதமாம் ஆயுறு வேதந்தானும்
    வீணாக வாயிரத்தி யிருநூறுபார்
போதமாம் போதரிடி பெருநூலப்பா
    பொங்கமுடன் காவியமா யிரந்தான்பாரு
நீதமென்ற கற்பமது வெண்ணூறும்பார்
    நிலையான கருக்கிடையு மைநூறும்பார்
வாதமென்ற காவியமா யிரந்தான்பாரு
    வளமையுள்ள திராவகமு மெண்ணூர்தானே.

விளக்கவுரை :


279. தானான வெண்ணூறு பார்த்தபின்பு
    தகைமையுள்ள பற்பமது வெண்ணூறும்பார்
தேவான மணிநாலா யிரந்தான்பாரு
    தெளிவான திருமந்திர மாயிரம்பார்
பானான கருக்கிடையும் முன்னூறும்பார்
    பாங்கான பள்ளு நாடகமும்பாரு
மானான பிறையோக காரமென்னும்
    மகத்தான காவிய மாயிரந்தான்காணே.

விளக்கவுரை :


280. காணவே செயகண்டி வாயிரம்பார்
    கருவான வாகடிய மைநூறும்பார்
பூணவே பெருனூ லாயிரத்தைன்னூற
    புகழான காவியமும் பார்க்கவேண்டும்
தோணவே யூகிமுனி பெருங்காவியந்தான்
    துப்புரவாய்ப் பார்த்தபின்பு சொச்சம்பாரு
வேணவே பெருந்திரட்டு குறுந்திரட்டுதானும்
    மிக்கான மாந்திரிய காவியந்தானாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 271 - 275 of 12000 பாடல்கள்


271. வைத்தாரே நூல்களின்மேல் தோஷஞ்சொல்லி
    வளமையுடன் யென்னூலைக் குருநூலென்று
கைத்ததொரு சீஷாக்கள் நூலைத்தானும்
    கடினமுடன்  குகைமுன்னே வைத்தபோது
வைத்ததொரு நூலெல்லாம் பிரளயத்தில்
    தாரணியில் மிதந்துவிடக் கண்டோர்தாமும்
தைத்ததொரு பெருநூல்கள் கருவியெல்லாம்
    நலமாக மிகுந்துவிடக் கண்டிட்டோமே.

விளக்கவுரை :


272. கண்டிட்ட நூல்களெல்லாம் பார்த்தாராய்ந்து
    கருவான காண்டமது பனிரெண்டாய்ச் சொன்னேன்
பண்டிதங்கள் பொய்யாமல் மெய்யாய்த்தானும்
    பாருலகில் பெருநூலாய்ச் சொல்லிவிட்டேன்
துண்டிதமாய் சில நூல்கள் சாகரத்தில்
    சுருதிசொரு ளானதுவும் மறைந்துபோச்சு
அண்டியே கடலோர மிதந்தநூல்கள
    வகுப்பட்ட மட்டுமல்லோ வறிந்தோம்யாமே.

விளக்கவுரை :


273. அறிந்ததொரு நூலையெல்லாஞ் சித்தர்தாமும்
    அன்புடனே மாறாட்ட மிகவுஞ்செய்து
செறிந்ததொரு குகைக்குள்ளே கொண்டுசென்று
    சிறப்புடனே தான்மறைத்தார் ரிடிகள்தாமும்
வறிந்ததொரு நூல்களிலே வுட்கருவையெல்லாம்
    மறைப்புடனே காட்டாமல் வொளித்தார்தாமும்
குறிந்ததொரு மூலமுத லனைத்தும்யாவுங்
    கொப்பெனவே வெளியிட்டார் சித்துதாமே.

விளக்கவுரை :


274. சித்தான சித்துமுனி புலஸ்தியாகேள்
    சீருடனே நூல்பார்க்க விதியுஞ்சொன்னேன்
பத்தியுடன் மாணாக்கள் பிழைக்கவென்று
    பாலித்தேன் நூல்விபரம் பண்பதாக
முத்திபெற வழிநூலாங் கண்டாராய்ந்து
    முனையான நூல்தொகுப்பு விபரஞ்சொல்வேன்
சத்தியென்ற மனோன்மணியாள் காமரூபி
    சட்டமுட னுறைத்தபடி சாற்றுவேனே.

விளக்கவுரை :


275. சாற்றுவேன் முந்நூல்தான் சிமிட்டுரத்தினம்
    சார்பான பின்னூல்தான் பூரணந்தானாகும்
போற்றுவேன் பின்னூல்தான் பூரணந்தானாகும்
    பொங்கமுடன் பின்னூல்தான் திருமந்திரமாகும்
ஆற்றவே வறுநூறும் பார்க்கவேண்டும்
    அப்பனே யெண்ணூறில் பெருநூலப்பா
சீற்றமுடன் முந்நூறில் சதுர்காண்டமப்பா
       சிறப்பான நசகாண்டம் முன்னூர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 266 - 270 of 12000 பாடல்கள்


266. இருந்தேனே வடிவேல ருபதேசங்கள்
    யெழிலுடனே பெற்றுமல்லோ பொதிகைசென்றேன்
திருத்தமுடன் பொதிகைதனில் கோடிசித்தர்
    திறமுடனே யெந்தனையும் எதிர்தான்கொண்டு
வருந்தியே வணக்கமது மிகவுஞ்செய்து
    வளமுடனே யாசீர்மங் கொண்டுசென்றார்
பொருந்தவே குகைக்குள்ளே வடியேன்றானும்
    பொங்கமுடன் சமாதிதனி லிருந்தேன்பாரே.

விளக்கவுரை :


267. பாரப்பா சமாதிதனி லிருந்தேன்யானும்
    பாங்குடனே பதினெண்பேர் சித்தர்தாமும்
நேருடனே யவரவர்கள் செய்தநூலை
    நேர்மையுட னெந்தனது குகையின்முன்னே
சீருடனே மூன்றுபத்து லட்சநூலை
    சிறப்புடனே பாடிவைத்தார் பதினெண்பேர்கள்
ஆருடைய நூல்பார்த்து வறிந்திட்டாலும்
    அப்பனே வெளிப்படைதா னொன்றுங்காணே.

விளக்கவுரை :


268. காணவே யித்தாதி நூல்களெல்லாம்
    கைலாச பொதிகையின் குகைமுன்னாக
வேணபடி சித்தரெல்லாங் கூட்டமிட்டு
    விருப்பமுடன் நூலதனையே கொண்டுசென்றார்
பூணவே நூலெல்லாம் பார்த்துமேதான்
    புகழாகத் தோஷமது சொல்லியல்லோ
மாணவே சித்தமுனி ரிடிகள்தாமும்
    மானிலத்தில் மதிப்பதற்கு நூல்செய்தேனே.

விளக்கவுரை :


269. செய்தேனே பதினெண்பேர் நூல்கள்தன்னை
    செப்பவே பெருநூலாங் காண்டமாக
உய்யதொரு காண்டமது பனிரெண்டுமாகும்
    உத்தமனே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
நையவே காவியம் பன்னீராயிரந்தான்
    நலமுடனே பாடிவைத்தேன் மாந்தர்க்காக
பையவே பாடியதோர் காவியத்தை
         பார்த்துமே பதினெண்பேர் கோபித்தாரே.

விளக்கவுரை :


270. கோபித்து யென்பேரில் சீறல்கொண்டு
    கொப்பெனவே சாத்திரத்தில் தர்க்கஞ்சொல்லி
சாபித்து குகைக்குள்ளே வைத்துமேதான்
    சட்டமுடன் குகைதனிலே வைத்துப்பின்பு
தூபிதங்க ளர்ச்சனைகள் மிகவுஞ்செய்து
      துறையோடும் முறையோடு மஞ்சலித்து
நேவித்து அஷ்டாங்க வர்ச்சனைகள்செய்து
    நிலையான சமாதியிடம் நூல்வைத்தாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 261 - 265 of 12000 பாடல்கள்


261. முன்னின்ற  வகஸ்தியரை வேலர்பார்த்து
    மோனமென்ற ஞானவுப தேசந்தன்னை
தன்மனையில் தேடிவந்த அகஸ்தியர்க்குத்
       தாஷ்டிகமாய் தானுரைப்பார் வேலர்தாமும்
கன்மவினை முன்னகற்றி கர்த்தாதானும்
    கைலகிரி நாதரைத் தொழுதுபோற்றி
தன்மனது யெந்நாளும் பூணவேதான்
    சட்டமுடன் வாக்கதுவு மளித்தார்தாமே.

விளக்கவுரை :


262. தாமான வடிவேலர் முருகன்றானும்
    சாற்றலுற்றா ரகஸ்தியர்க்கு மின்னஞ்சொல்வேன்
நாமான யிதிகாச புராணமெல்லாம்
    நலமுடனே கற்றறிந்த வகஸ்தியர்க்கு
கோமான்போல் தென்பொதிகை வீற்றிருந்த
    குருபரனாம் அகஸ்தியனார் முனிவருக்கு
பூமாது மனோன்மணியாள் கடாட்சத்தாலே
           புகழுடனே உபதேசஞ் சொன்னார்பாரே.

விளக்கவுரை :


263. பரேதான் நாலுயுக அதிசயங்கள்
    பாலகனே எந்தனுக்குச் சொன்னாரப்பா
நேரேதான் துவாபர யுகத்தில்தானும்
    நேரான யெந்தனுக்குச் சமைந்தசாபம்
கூராகத் தீர்த்தத்தின் கரையினோரம்
         குறிப்பான சடாயுவென்ற பட்சிதன்னால்
வீரமுடன் நேரிட்ட சாபந்தன்னை
    விருப்பமுட னெந்தனுக்கு தீர்த்தார்காணே.

விளக்கவுரை :


264. காணவே சடாயுவின்றன் சாபந்தன்னை
    காசினியில் தீர்த்ததோரு கதைகள்தன்னை
பூணவே கலியுகத்தில் சித்துதாமும்
    புகழாய்ச் சாத்திரத்தில் சொல்லவில்லை
வேணவே யான்றானும் யிந்தநூலில்
    விபரமுடன் சொல்லிவிட்டே னுந்தனுக்காய்
வாணர்முதல் யின்னூலைக் கண்டிட்டாலும்
    வளமான சாபமதை யறியார்தாமே.
            
விளக்கவுரை :


265. அறியாதே யிந்நூலில் தோஷஞ்சொல்லி
        வப்பனே யநேகம்பேர் வரமும்பெற்றார்
குறிபோலே வடிவேலர் உபதேசத்தைக்
    கொற்றவனே புலஸ்தியனே அடியேன்றானும்
முறிபடவே ஞானோப தேசந்தன்னை
    முதன்மையாய் எந்தனுக்கு உபதேசித்தார்
நெறியுடனே யானுமுப தேசம்பெற்று
    நேர்மையுடன் வெகுகால மிருந்தேன்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 256 - 260 of 12000 பாடல்கள்


256. அழியாது முப்பூவின் அருமையப்பா
    அதிதமாம் வழலையது காரத்தாலே
குழிதனிலே நெடுங்கால மிருந்திட்டாலும்
    குற்றமொன்றும் வாராது தேகம்பொன்னாம்
வழியோடே காயத்தை நிறுத்தலாகும்
    நிறத்தாலும் ஆவியது நிலைநில்லாது
பழியான சடலமது பாரில்மண்ணாம்
    பலகால மிருந்தாலு மழியுந்தானே.
    
விளக்கவுரை :


257. தானான வழலையது காரசாரம்
    தாக்கான சரக்கெல்லாம் நீற்றும்பாரு
கோனான யெனதையர் கிருபையாலே
    கொற்றவனே பற்பத்தின் போக்குசொல்வேன்
பானான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
    பாச்சடா நவலோகந் தன்னிற்றானும்
வேனான பற்பமது யேமமாகும்
    மிக்கான மாற்றதுவுஞ் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


258. ஒண்ணாது யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன்
    வுத்தமனே புலஸ்தியரே சொல்லக்கேளும்
நண்ணமுடன் வடிவேலர் தம்மிடத்தில்
    நாட்டமுடன் வெகுகால மடுத்திருந்தேன்
கண்ணபிரான் பெற்றதுபோ லடியேன்றானும்
    காசினியி லுபதேசம் பெறவேவந்தேன்
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வணக்கமுடன் வேலவரை கேட்டார்தாமே.

விளக்கவுரை :


259. கேட்டவுட னடியேன்மேல் மனதுவந்து
    கேள்வியின் வுத்தாரச் சொற்படிக்கி
நீட்டமுடன் ஞானோப தேசந்தன்னை
    நெடுங்காலம் போதிப்பே னென்றுசொல்லி
வாட்டமுடன் வடிவேலர் சந்தோடித்து
    வாகுடனே அகஸ்தியர்க்கு வுபதேசங்கள்
கூட்டமுட னந்தீசர் முன்னதாக
    கூறுவார் வுபதேசங் கூறுவாரே.

விளக்கவுரை :


260. கூறவே வடிவேலர் அகஸ்தியர்க்கு
    குறிப்புடனே அகஸ்தியரும் மனதுவந்து
ஆறவே சகலகலைக் கியானமெல்லாம்
    அவனிதனி லறிவதற்கு குருவுமாகி
மீறவே சகலநூல் கியானவானாய்
    மிக்கான நூல்களுக்கு முதல்வனாக
மாறவே அட்சரத்துக் குடையோனாக
    மகத்தான அகஸ்தியரு முன்னின்றாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்


251. செப்பவென்றால் அண்டமென்ற கல்லைத்தானும்
          தெளிவுடனே நாதாக்கள் சொற்படிக்கி
ஒப்பமுடன் அண்டமென்ற கல்லைத்தானும்
          வுத்தமனே காரமென்ற செயநீர்தன்னால்
சிப்பியுட செயநீர்தான் கடுங்காரமாச்சு
           யிப்புவியி லாரறிவார் அண்டப்போக்கு
தப்பாமல் அண்டக்கல் காரமேற்றி
           தகைமையுடன் கெஜபுடத்தில் போட்டிடாயே.

விளக்கவுரை :


252. போடவே யண்டக்கல் சுண்ணாம்பாகி
          பொங்கமுடன் சுண்ணமென்ற நெடிதான்வீகம்
நீடவே சரக்குக்குக் காலனாகும்
          நெடிதான சத்துருவைக் கொல்லுமித்திரன்
சாடவே பாஷாண முப்பத்திரெண்டும்
          சாங்கமுடன் பொருமியது
தேடவே வழலையென்ற வண்டமுப்பை
          தெளிவுடனே சீசாவிற் பதனம்பண்ணே.

விளக்கவுரை :


253. பண்ணவே சுண்ணமதை கடுகளவுதானும்
           கருவான வெண்ணைதனில் கொண்டாயானால்
நண்ணமுடன் காயாதி கற்பமாகும்
           நாதாக்க ளுந்தனையும் நவிலுவார்கள
எண்ணமுடன் நாதாக்க ளும்மைத்தானும்
            யெழிலாக முப்பூவைக் கேட்டபோது
வண்ணமுடன் முப்பூவைக் கொடுக்க்கவேண்டாம்
            வளஞ்சொல்லி சித்தர்களுங் கேட்பார்தாமே.

விளக்கவுரை :


254. கேட்டவுடன் மனமகிழ்ந்து கொடுக்கவேண்டாம்
           கெடியான வார்த்தைக்கு அஞ்சவேண்டாம்
நீட்டமுடன் முப்பூவைக் கண்டபோது
           நீயுமொரு சித்தனாய் ஆகிவிட்டாய்
நாட்டமுடன் வழலைதனை அறிந்ததாலே
           நலமான அஷ்டசித்து மாடலாகும்
தாட்டிகமாய் பற்பமதை தேனிலுண்ண
          தாரணியில் வெகுகால மிருக்கலாமே.

விளக்கவுரை :


255. இருக்கலாம் கோடிவரை யுகாந்தகாலம்
    யெழிலுடனே நாலுயுகங் காணலாகும்
பொருக்கவே தேகமது கற்றூணாகும்
    பொங்கமுடன் சட்டையது தள்ளும்பாரு
வகுக்கவே தேகமது பொன்போல்வீசும்
    வளமான வாசியது கீழ்நோக்காகும்
இருக்கவே  கோடியுகம் சமாதிதன்னில்
    யெழிலாக தேகமது அழியாதென்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 246 - 250 of 12000 பாடல்கள்


246. பிசைந்துமே மூன்றுநாள் ரவியிற்போடு
    பிசகாமல் நான்காம்நாள் பின்னுமப்பா
இசைந்ததொரு பள்ளமதை சுத்தித்தேதான்
    யெழிலான சல்லாவை கீழேவைத்து
திசைமுகமுங் காணாமல் பிசைந்தமண்ணை
    திகழவே ரவைசல்லா மேலேகொட்டி
நசைந்ததொரு பிரிதீவா மண்ணுதன்னை
    நாட்டமுடன் போட்டுமல்லோ மூடிடாயே.

விளக்கவுரை :


247. மூடவே மூன்றாம்நாள் கதிரோன்முன்பு
    முனையான பரிபாஷை விதியதாக
சாடவே நீபோய் பார்க்கும்போது
    சட்டமுடன் பூநீறு சாண்தானப்பா
நீடவே பூமிதனில் வளர்ந்திருக்கும்
    நீசமான பூநீரை யெடுத்துபாலா
கூடவே மறுபடியுங் குழிதான்வெட்டி
    கொப்பெனவே பூனீறைபோடக்கேளே.

விளக்கவுரை :


248. கேளேதான் பூனீரை யெடுத்துமைந்தா
    கெணிதமுடன் குழிதனிலே பின்னும்போடு
தாளவே யதின்மேலே சல்லாவைத்தான்
    தகைமையுடன் மேல்பரப்பி மண்ணை மூடி
ஆளவே கெட்டணைகள் மிகவுஞ்செய்து
    அப்பனே மூன்றுதிங்கள் பொறுத்தபின்பு
மீளவே மண்ணதனைக் தோண்டிப்பார்க்க
    மிக்கான மண்ணதுவுங் கெட்டியாமே.

விளக்கவுரை :


249. கெட்டியாம் மண்ணதனை யுடைத்துப்பார்க்க
    கெடியான அண்டமென்னுங் கல்லுதானும்
கட்டியாய் யுருண்டுமல்லோ திரண்டுமேதான்
    கருவான பிண்டம்போ லிருக்கும்பாரு
மட்டியென்ற ஆனைக்கல் லென்றும்பேரு
    மகத்தான காரசார மானகல்லு
வட்டமுட னடுமைய மிருகடுங்கல்லு
    வளமான கல்லினது வேகம்பாரே.

விளக்கவுரை :


250. பாரேதான் அண்டமென்ற பிண்டக்கல்லை
    பாருலகில் யாரறிவார் சிவயோகிகாண்பான்
நேரேதான் புத்திவா னறிவான்பாரு
          நேர்மையுடன் விட்டகுறை யிருக்குமானால்
சீரேதான் வழலையென்ற மார்க்கமப்பா
          திறமுடனே லபிக்குமடா புண்ணியோர்க்கு
வேரேதான் பிண்டமென்ற கல்லைத்தானும்
          விருப்பமுடன் செய்யும்வகை செப்பக்கேளே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 241 - 245 of 12000 பாடல்கள்


241. விழலானார் பரிபாஷை பார்த்துமல்லோ
    விருதாவாய்த் தெரியாமல் மாண்டார்கோடி
வழலைமுகம் தானறியார் மாணாக்காளே
    வகண்டபரி பூரணத்தை மெய்யென்றெண்ணி
கழலவே யென்னூலில் ரோமபாஷை
    பரிவாகச் சொல்லிவிட்டேன் வைநூறுக்குள்
சுழலவே கண்டறிந்து காண்பானாகில்
    சுத்தமுள்ள சித்தனென்னும் பேருமாச்சே.

விளக்கவுரை :


242. ஆச்சப்பா ரோமரிடி பரிபாஷையப்பா
    வாச்சரிய லோகமதி லாருங்காணார்
பேச்சப்பா பேசுதற்கு இடமுமில்லை
    பேரான கைமறைப்பு யாதொன்றில்லை
வாச்சப்பா வழலையிட மார்க்கந்தன்னை
    வாகுடனே பாடிவைத்தேன் ரெண்டாங்காண்டம்
ஓச்சப்பா யாருந்தான் சொல்லக்கூடா
    யெழிலான தென்வாக்கு வுறுதியாமே.

விளக்கவுரை :


243. உறுதியா மிந்தபரி பாஷைதானும்
    வுத்தமனே சிவயோகி அறிவானப்பா
நிறுதிமொழி வார்த்தையினால் நிட்சயித்து
    நீடுழி காலம்வரை யென்னூல்பார்த்து
குறுதியுள்ள சூத்திரமும் பதினாறுபார்த்துக்
    குறிப்புடனே சோடசமு மிரண்டும்பார்த்து
அறுதியுடன் பரிபாஷை யறிந்துமேதான்
    அப்பனே முப்பூவை முடிப்பாய்தானே.

விளக்கவுரை :


244. முடிப்பதற்கு நாளுமது யெட்டில்பாரு
    முனையான கதிரோனும் சரியாய்நிற்பான்
துடிப்புடனே காவனத்திற் செல்லும்போது
    துறைபோல முறைபோல நீயுஞ்சென்று
குடிப்பழுது நேராமல் ரேசகத்தைப் பார்த்து
    குறிப்புடனே வேளையது யென்னூல்பார்த்து
அடிப்பறையில் பிரதிவியில் மண்ணைத்தோண்டி
    அப்பனே ரவிதனிலே காயப்போடே.

விளக்கவுரை :


245. போடையிலே மண்ணுமது கசுவுவாங்கி
    பொங்கமுடன் காற்றாறி யிருக்கும்போது
நீடமுடன் சல்லாவை மேலேபோட்டு
    நிஷ்களமாய் பணியதுவும் மேற்படாமல்
மூடவே மூன்று நாள்சென்றபின்பு
    முறைபோலென் பரிபாடை கையிலேந்தி
கூடயிலே கேணிநீர் கொண்டுவந்து
    குமுறவே சலமதனால் பிசைந்திடாயே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 236 - 240 of 12000 பாடல்கள்


236. தானேதான் விளைந்ததொரு சுக்கான்கல்லு
    தகைமையுள்ள கல்லதுவும் பிரமக்கல்லு
வேனேதான் குடுகுடுக்கல் சுக்கானாச்சு
    வேகமுடன் தான்வேளர்ந்த மட்டிக்கல்லு
மானேதான் வூமையென்ற ரத்தினக்கல்
    மகத்தான விஷபீசக் கல்லென்றும்பேர்
கோனேதான் குருசொன்ன கல்லுமாகும்
    கொடிதானே ரோமமென்ற கல்லுமாமே.

விளக்கவுரை :


237. கல்லான கல்லதுவும் கோரைக்கல்லு
    கருவான மட்டியென்ற கோரைக்கல்லு
புல்லான பாலைநிலம் தன்னில்மேவும்
    புகழான கல்லதுவும் பொருமல்கல்லாம்
கொல்லான சிவந்தக்கல் நாமக்கல்லாம்
    சுத்தமுள்ள சிவந்தநிறக் கல்லுமாகும்
வில்லான கல்லுமப்பா மேதினிக்குள்
    மேன்மையுடன் தான்வளர்ந்த பிண்டமாமே.

விளக்கவுரை :


238. பிண்டமாம் கல்லென்ற நாமமாச்சு
    பேறான பனியினால் விளைந்தக்கல்லாம்
அண்டமதில் விழுந்ததொரு கங்கையாலே
    அதிற்பிறந்த கல்லாச்சு யென்றுசொன்னீர்
தண்டமென்னும் பிரிதிவினால் விளைந்தகல்லு
    தன்மையுள்ள சூட்சமது மறைத்துப்போட்டீர்
கொண்டபடி மனக்குறைக ளதிகம்வைத்து
    கோளாறு வாகவேதான் பாடீனீரே.

விளக்கவுரை :


239. பாடியே பரிபாஷை தியக்கமாகப்
    பாருலகில் யாரேனுங் காண்பாருண்டோ
தேடியே கெட்டலைந்து சுட்டுமாண்டு
    தேசத்தில் சமுசாரி மாண்டாரப்பா
வாடியே முகம்வாடி நிதியும்போய்
    வண்மையுள்ள வுத்தியது மிகவுங்கெட்டு
கூடியே கும்பல்கும்ப லாகக்கூடி
    குவலயத்தில் கெட்டார்கள் கோடியாமே.

விளக்கவுரை :


240. கோடிபேர் பரிபாஷைப் பார்த்துமல்லோ
    குவலயத்தில் மாண்டார்கள் லக்கோயில்லை
நீடியே மறைத்துவைத்த வண்மையாலே
    நிலையான பொருளென்று நிர்ணயித்து
நாடியே சித்திராப் பருவந்தன்னில்
    நாட்டமுடன் பூவழலை யெடுப்பதற்கு
தேடியே காவனத்திற் சென்றுமல்லோ
    தேசத்தில் வெகுபேர்கள் விழலானாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 231 - 235 of 12000 பாடல்கள்


231. முப்பாலே வந்ததொரு வப்பூவாச்சு
    முதன்மையாம் பனிநீருஞ் சென்னீராச்சு
தப்பாமல் மழையினால் வந்தநீராம்
    தண்மையுள்ள குளிர்ச்சியினால் பனிநீராச்சு
ஒப்பான மேகமது தானழிந்து
    வுற்பனமாங் கெர்ச்சையுடன் வழலைதன்னில்
வெப்பமுடன் மழைசொரியும்போதுவல்லோ
    வேகமுடன் காற்றதுவும் மேவுங்காணே.

விளக்கவுரை :


232. காணவே சித்திரையாம் பருவந்தன்னில்
    களிப்புடனே மேகமது கர்ச்சித்தேதான்
தோணவே காற்றெழும்பி சுடர்போல்வீசி
    துப்புரவாய்ப் பூமிதனில் விழுகும்போது
ஈணவே மதியுப்பு காரசாரம்
    இயலான வுவருப்பு வதிலுண்டாச்சு
வேணவே பரிபாஷைத் திரட்டையெல்லாம்
    விருப்பமுடன் தான்படித்து மறைத்தீர்தாமே.

விளக்கவுரை :


233. மறைத்தொரு பூநீரைக் காரசாரம்
    மானிலத்தில் காட்டாத வண்மையெல்லாம்
திறைப்புடனே கண்டறிந்து திறலும்பார்த்து
    திறமான வழலையுட கணிதம்பார்த்து
புறையகற்றி வண்டக்கல் லிருக்கும்ஸ்தானம்
    புகலாத காரணத்தால் பாபமாச்சு
குறைப்படியே சாத்திரத்தைப் பிரட்டிப்பாடி
    கூர்மையுள்ளான் கண்டறிவா னென்றிட்டீரே.

விளக்கவுரை :


234. என்றீரே மேகத்தா லுற்பவித்த
    யெழிலான பனியதுவால் விளைந்தவுப்பு
வென்றீரே கதிரோனால் விளைந்தவுப்பு
    வேகமுள்ள வளர்தனிலே விளைந்தவுப்பு
தின்றதொரு வுப்பெல்லா மிதற்குள்ளாச்சு
    தீர்த்தகரை யாடிவந்த வுப்புமாச்சு
தென்றிசையின் கன்னியா குமரிதன்னில்
    தேர்ந்தெடுத்த வுப்பதுவுந் தெளிமைபாரே.

விளக்கவுரை :


235. பார்க்கையிலே வண்டபிண்ட மென்றுஞ்சொன்னீர்
    பாருலகில் நடுப்பிண்ட மிதுவுமாச்சு
தீர்க்கமுடன் தலைப்பிண்ட மிதுவுமாகும்
    திகழான கடைப்பிண்ட மிதுவுமன்றீர்
நீர்க்கமுடன் பிண்டக்கல் லென்றுசொல்லி
    நெடுநாளாய் வளர்ந்ததொரு கல்லுமென்றும்
மூர்க்கமுடன் வளர்ந்ததொரு கல்லுமென்று
    முக்கியமாய்த் தானுறைத்தீர் முதன்மைதானே.

விளக்கவுரை :

Powered by Blogger.