அகத்தியர் பன்னிருகாண்டம் 421 - 425 of 12000 பாடல்கள்


421. முனியான யென்தேவா லோகநாதா
    மூதுல கைரைகண்ட சித்தேசாமி
தனியாக தங்க மண்டபத்திலேதான்
    தகமையுடன் கொலுவிருக்கும் மெந்தன்நாதா
கனிவுடனே கைலங்கிரி சேதிதன்னை
    களிப்புடனே யெங்களுக்குக் கழர வேண்டும்
இனிதான பவமகற்றி யெங்களுக்கு
    எழிலான வுபதேசஞ் சொல்லொண்ணாதோ.

விளக்கவுரை :


422. ஒண்ணாது காயாதி கற்பங்கொண்டு
    உத்தமனே வெகுகால மிருக்கவென்று
கண்ணபிரான் தன்பக்க லடியோம்சென்று
    காலடிகள் நமஸ்கார மிகவுஞ்செய்து
நண்ணவே நதாந்த சித்துரூபம்
    நாட்டிலே யொருவரால் சொல்லப்போமோ
வண்ணமுடன் நாதாந்த சித்துதாமும்
    வளமையுடன் யெங்களுக்கு விடைசொல்வீரே.

விளக்கவுரை :


423. விடையென்று கேட்கையிலே ரிடியார்தாமும்
    வேதாந்த சித்தருக்கு வினயஞ்சொல்வார்
தடையில்லா நாலுயுக வதிசயத்தை
    தாரணியில் சித்தருக்கும் சொல்வார்பாரு
கடையான பிரம்மாவு மெந்தன்மீதில்
    கருணைதனை நீக்கியல்லோ சாபந்தந்து
சடைபோன்ற பிரம்மாவும் சண்டையிட்டு
    தாரணியில் போகவென்று சபித்திட்டாரே.

விளக்கவுரை :


424. இட்டாரே சாபமது தீர்வதற்கு
    எழிலுடனே தாரணியில் வந்தேனென்றார்
சட்டமுடன் பிரம்மாவு மெந்தனுக்கு
    சாங்கமுடன் வுபதேசம் சொன்னதாலே
திட்டமுடன் வுபதேசங் வேண்டேனென்று
    தீர்க்கமுடன் தேவபுரம் அடுத்துயானும்
வட்டமுடன் தேவேந்திர பகவான்தன்னை
    வாதித்து சிலகேள்வி கேட்டேன்யானே.

விளக்கவுரை :


425. கேட்டேனே பிரம்மாவி னுபதேசங்கள்
    கெடியான யென்செவியிற் கேளாதென்றோ
மாட்டானே யுந்தனிட வுபதேசங்கள்
    மானிலத்தில் நீயுமொரு மனிதனல்லோ
பாட்டனார் வுந்தனிட பாட்டன்தானும்
    பாரினிலே யென்மரபுக் குறியோரல்லோ
மாட்டிமையாய் நீயுமொரு மாண்பனல்லோ
    மானிலத்தில் சென்மமென்று தள்ளிட்டேனே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 416 - 420 of 12000 பாடல்கள்


416. இருப்பாரே கைலங்கிரி ரிடிதானப்பா
    எழிலான நடுமையம் படியந்தன்னில்
பொருப்பான நவரத்தின கசிதமான
    பொன்னான திருக்கூட மண்டபந்தான்
தருப்புகல வராட்சி மணிதானப்பா
    தாரணியில் நூறு யோசனைதான்கேட்கும்
துருப்புநிகர் சிங்களத்தா ராயிரம்பேர்
    தோறாமல் யேவல்பணி முன்னிற்பாரே.

விளக்கவுரை :


417. நிற்பாரே சிங்கள தேசத்தார்கள்
    நிலையான சித்தர்முனிக் கேவலாக
சொற்படியே கோட்டைதனைச் சுற்றியேதான்
    சோரமது போகாமல் காவலுண்டு
விற்படித்த மன்னவர்கள் காணானாடு
    வேதாந்த பீடமென்ற சித்தர்நாடு
அற்பமென்று நினையாதே புலஸ்தியாகேள்
    அழகான சிங்களவர் நாடுதானே. 

விளக்கவுரை :


418. நாடான ரிடிமுனிவ ரிருக்கும்நாடு
    நாதாந்தத் தங்கமென்ற மண்டபந்தான்
காடான யேகாந்த மண்டபத்தில்
    கைலங்கிரி ரிடியான பெரியோரப்பா
தாடாண்மைக் கொண்டதொரு சித்துதாமும்
    தாரணியில் நாலுயுகங் கொண்டசித்து
நீடான மயேஸ்வரத்தின் சித்துவப்பா
    நீணிலத்தி ரிடியாக வுதித்தார்பாரே.

விளக்கவுரை :


419. உதித்தாரே முன்யுகத்தில் பிரம்மர்சாபம்
    ஓகோகோ தேவரிடி யானவர்க்கு
கதிப்புடனே சாபமது நேர்ந்ததாலே
    கைலங்கிரி தன்னைவிட்டு வெளியில் வந்தார்
மதிப்புடனே வையகத்து சித்தரெல்லாம்
    மாட்சியோடு தேவதா ரிடியைத்தானும்
துதியோடு தேவதா மண்டபத்தில்
    துப்புறவாய்க் கொண்டசென்று துதித்தார்பாரே.

விளக்கவுரை :


420. பாரப்பா சித்தர்முனி ரிடியார் தாமும்
    பட்சமுடன் தேவதா ரிடியைப்பார்த்து
ஆரையா யென்சாமி யெந்தன்நாதா
    அவனியிலே யிருந்தவாசி யாயுதித்தீர்
பேரான பிரபஞ்ச மாய்கைதன்னை
    பேரின்பக் கடல்தனிலே தான்மறந்த
தீரமுடன் சித்தொளிவு ரிடியார்தம்மை
    தீர்க்கமுடன் கேட்கலுற்றார் முனிவர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 411 - 415 of 12000 பாடல்கள்


411. செப்பலாம் யின்னம்வெகு வதிசயங்கள்
    தேற்றமுடன் சொல்லுகிறேன் புலஸ்தியாகேள்
ஒப்பமுடன் நர்மதா நதிக்குத்தெற்கே
    ஓகோகோ நாதாக்க ளிருப்பிடந்தான்
எப்போதும் வீற்றிருக்கும் பதியொன்றுண்டு
    எழிலான சிங்கள தேசமப்பா
அப்பெரிய பதிதனிலே விருட்சமப்பா
    அழகான தேவதா விருட்சமாமே.

விளக்கவுரை :


412. ஆமேதான் விருட்சமது கோடியுண்டு
    அழகான தோப்புண்டு பொய்கையுண்டு
நாமேதான் சொன்னபடி பொய்கைதன்னில்
    நடுவான மத்திபத்தில் மண்டபந்தான்
வேமேதான் யேமமென்ற மண்டபந்தான்
    வெளியரங்க மானதொரு விசித்திரரூபம்
தாமேதான் தேவாதி மண்டபந்தான்
    தகைமையுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே.

விளக்கவுரை :


413. பண்பான நீராழி மண்டபத்தில்
    பாங்கான தேவதச்சா விசுவகர்மர்
நண்பான தங்கமென்ற பாளந்தன்னால்
    நலமான விசுவரூப சுதந்தரங்கள்
கண்புடனே ரூபமென்ற ரேகையோடு
    கைலங்கிரி பர்வதம்போல் தானமைத்து
தண்மையுடன் சித்தர்முனி யிருக்கவேதான்
    தடாகமதிற் செய்துவைத்தார் விசுவர்தானே.

விளக்கவுரை :


414. தானான தேவதா விசுவரப்பா
    தரணியில் சித்தர்முனி யிருக்கவேதான்
கோனான குரூபீட மண்டபந்தான்
    கொற்றவனே கைலங்கிரி யென்னலாகும்
தேனான புலஸ்தியனே நண்பாகேளு
    தெய்வபுர மிதற்கீடு சொல்லப்போமோ
பானான மனோன்மணியாள் வாசஞ்செய்யும்
    பாங்கான தேவ மண்டபந்தானாமே. 

விளக்கவுரை :


415. மண்டபத்தை சுத்தியல்லோ மாமுனிவர்சித்தர்
    மதிப்புடனே ஒவ்வொரு படிகள்தோறும்
அண்டமுடி ராட்சதாள் பூதம்யாவும்
    அங்கணங்க ளொவ்வொன்றில் பாதுகாப்பார்
தண்டக ரிடிவனத்து சித்தர்தாமும்
    தகமையுடன் னொவ்வொரு படியில்நிற்பார்
கண்டிடவே நடுமையந் தன்னிலப்பா
    கைலாச ரிடியொருவ ரிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 406 - 410 of 12000 பாடல்கள்


406. சொல்லவே டில்லிக்குக் குடபாகத்தில்
    சொற்பெரிய தேவதாஸ் தலமொன்றுண்டு
புல்லவே தடாகமென்ற பொய்கையுண்டு
    புகழான மஞ்சள் தாமரையுமுண்டு
மல்லான மனவரஞ் சிதமுமுண்டு
    மகத்தான தேவதா புட்பமுண்டு
கல்லான கடகமது பொய்கைதன்னில்
    கண்டவர்க ளாயிருந்தான் யில்லைதானே.

விளக்கவுரை :


407. இல்லையே தேவதாஸ் தலத்திலப்பா
    எழிலான புலஸ்தியனே சொல்வேன்பாரு
கல்லையே கணியாக்கி கவுண்டுசெய்து
    கடிதான வாலயமாம் நடுமையத்தில்
வில்லைப்போல் நாணியது பூட்டியேதான்
    வீரான சூத்திரமாந் தானமைத்து
எல்லைக்குக் காவலாய் மதியம்பூண்டு
    எழிலாகத் தான்சமைந்து யிருக்கும்பாரே.

விளக்கவுரை :


408. பாரப்பா சித்தருள்ள தேவஸ்தானம்
    பளிங்கான குண்டுக்கல் பாணமுண்டு
மேரப்பா நடுமையந் தன்னிலப்பா
    மேலான சித்தருட கைமறைப்பு
ஆரப்பா யறிவார்க ளிந்தப்போக்கு
    அப்பனே சத்துரு சங்காரப்போக்கு
சேரப்பா ராஜாதி ராஜர்தம்மை
    செயிக்கின்ற குண்டுக்கல் பாணமாமே.

விளக்கவுரை :


409. பாணமாங் கோட்டைக்குள் ளிருக்குங்குண்டு
    பாங்கான தேவதாஸ் தலத்தின்குண்டு
மாணவே வையகத்து மாண்பர்தாமும்
    மகத்தான தேவதாஸ் தலத்தின்நேர்மை
காணவே வந்தவரைக் கொல்லுங்குண்டு
    கருவான சித்தரென்றா லழைக்குங்குண்டு
தோணவே சித்தாதி முனிவர்தாமும்
    தோற்றமுடன் தானிருக்குங் கோயிலாமே.

விளக்கவுரை :


410. கோயிலாம் தேவதாஸ் தலமுமாகும்
    குறிப்பான கோட்டையது சொல்லொண்ணாது
வாயிலாம் ராஜாஜி ராஜர்மெச்சும்
    வகுப்பான கோயிலுள்ளே சித்தர்கூட்டம்
பேயான ராட்சத பூதம்யாவும்
    பேரான கோட்டைக்குக் காவலுண்டு
தாயான மனோன்மணியாள் வீற்றிருக்கும்
    தகைமையுள்ள கோட்டையென்று செப்பலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 401 - 405 of 12000 பாடல்கள்


401. காணவென்றால் வெகுகோடி மகிமையுண்டு
    காசினியில் கண்டவர்க ளாருமில்லை
பூணவே சிங்கமது வுரங்குங்காடு
    புகழான சிறுபுலிகள் உலாவுங்காடு
ஈணவே பலமிருக்ம் யிருக்குங்காடு
    எழிலான மாண்ப ரறியாதகாடு
தோணவே கண்ணுக்குத் தோற்றாகாடு
    தொல்லுலகோ ரறியாத வனமுமாச்சே.

விளக்கவுரை :


402. ஆச்சப்பா அவ்வனத்தில் கல்லொன்றுண்டு
    அப்பனே நூறு யோசனைதானப்பா
பேச்சப்பா சொல்லுதற்கு நாவுமில்லை
    பேரான வகலமது யெண்பதாகும்
காச்சலென்ற பரிதியது காணலாகா
    பாங்குடனே பனிமூடுங் குத்துக்கல்தான்
பாச்சலுடன் மேற்பாகஞ் செல்வதற்கு
    பாங்கான படியுண்டு சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


403. உண்டான படியல்லோ லக்கோயில்லை
    உத்தமனே படிதோறுஞ் சித்துதாமும்
அண்டமது முகத்தளவாய் வரைகள்தோறும்
    அணியணியாய் சித்தர்முனி வீற்றிருப்பார்
கண்டாலே யின்னாட்டு மாண்பர்தன்மை
    கல்லாகச் சமைத்திடுவார் சித்துதாமும்
தண்டவனம் யாரேனுஞ் செல்லமாட்டார்
    தரணிதனில் சிவயோகி செல்வான்கேளே.

விளக்கவுரை :


404. கேளேதான் சித்தர்முனி ரிடிகள்தாம்
    கெவனமுடன் குளிகையது கொண்டுமல்லோ
நாளேதா னவ்வழியே போவாருண்டு
    நலமுடனே யவ்வழியில் வருவதுண்டு
வீளேதான் நாதாக்கள் குடியிருப்பு
    விண்ணுலக மிதற்கீடு சொல்லப்போமோ
ஆளேதான் அவ்வனத்தில் யாருஞ்செல்வார்
    அப்பனே மாய்கையென்ற சித்துதாமே.

விளக்கவுரை :


405. சித்தான நவகோடி ரிஷிகள்தாமும்
    சீரான மண்டபத்தில் வீற்றிருப்பார்
குத்தான மேற்கல்லி லதிசயங்கள்
    கொப்பெனவே மிகவுண்டு சொல்லொண்ணாது
முத்தான ஜோதியென்ற விருட்சந்தானும்
    முனையான சிகரமதி லிருக்கும்பாரு
சத்தான நகரமெல்லாஞ் சோதிகாட்டும்
    சதாசிவத்தின் பெருமையது சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 396 - 400 of 12000 பாடல்கள்


396. தாமான கற்பமது கொண்டபோது
    தாரணியில் கோடிவரை யிருக்கலாகும்
போமேதான் காயாதிக் கொண்டவர்க்கு
    பொங்கமுட னரைதிரையு மற்றுப்போகும்
நாமேதான் சித்தருட வைப்புதன்னை
    நாதாந்த முனிகளுமே செய்மாட்டார்
வேமேதான் கோட்டைக்குள் அதிசயங்கள்
    விதவிதமாய் இருப்பதுவுங் காணலாமே.  

விளக்கவுரை :


397. காணலாம் அயோத்திக்குக் கீழ்பாகத்தில்
    கடிதான நதியொன்று கானாறுண்டு
பூணவே கானாறு நடுமையத்தில்
    பொங்கமுடன் ஆயக்கால் மண்டபந்தான்
வாணமுடன் அளர்பூமி தன்னைச்சுற்றி
    வாகுடனே கதிர்போல சூழ்ந்திருக்கும்
நீணமுடன் நூறு யோசனையுந்தானும்
    நிலையான உவர்ப்பூவு சவுக்காரமாமே.

விளக்கவுரை :


398. காரமாஞ் சீனபதிக் கொப்பதாகும்
    கருவான சித்தர்முனி ஸ்தலமென்பார்கள்
தூரமுடன் கோட்டையது காணார்தானும்
    துப்புரவாய்க் கண்ணிற்குத் தோன்றாதாகும்
வீரமுடன் நவதாது பாஷாணங்கள்
    விளைகின்ற சத்துள்ள பிரிதிபாகம்
தீரமுடன் சித்தர்முனி நாதர்தாமும்
    சிறப்புடனே வீற்றிருக்கும் பூமிபாரே.

விளக்கவுரை :


399. பாரேதான் நர்மதா கிழக்கேயப்பா
    பாங்கான ராமகிரி தேசமுண்டு
ஊரேதான் ஒருநூற்றுக் காதமப்பா
    உத்தமனே நர்மதா கிழக்குபாகம்
சீரேதான் நடுநாடு மத்திபத்தில்
    சிறப்புடனே திட்டான மேடையுண்டு
நேரான மேடையில் நடுபாகத்தில்
    நெருக்கமுள்ள குன்றொன்று யிருக்குந்தானே.

விளக்கவுரை :


400. தானேதான் சமைந்திருக்கு மண்டபத்தில்
    சதகோடி சூரியர்போல் சித்தருண்டு
வானவர்கள் முதலான தேவர்தாமும்
    வந்திறங்கும் பொய்கையது சுனையொன்றுண்டு
தேனான சித்தர்முனி ரிடிகள்தாமும்
    தேர்வேந்தர் ராஜாதி மண்டபத்தில்
மானான மதிலோரஞ் சுற்றோரத்தில்
    மார்க்கமுடன் தவசுமிகச் செய்வார்காணே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 391 - 395 of 12000 பாடல்கள்


391. பார்க்கலாங் கன்னிடைய சித்தரப்பா
    பாருள்ள நிதிகளுக்குக் காவலுண்டு
தீர்க்கமுடன் கிங்கிலிய ராயிரம்பேர்
    தீரமுட னணியணியாய்க் காலலுண்டு
ஏர்க்கவே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    எழிலுடனே போவதும் வருவதுண்டு
மார்க்கமுடன் தலைவாசல் காளிகாவல்
    மகத்தான யிடமெல்லாம் வயிரவனாமே.

விளக்கவுரை :


392.  ஆமேதான் அரண்வாசல் கோட்டைதன்னில்
    ஆயிரம் பெருங்காதம் வழிகள்தோறும்
நாமேதான் சொன்னபடி சித்தர்கூட்டம்
    நாதாந்த சீடவர்க்கங் கூறப்போமோ
போமேதான் செனகமுனி கோட்டையப்பா
    பொங்கமுடன் சொல்வதற்கு நாவுண்டோசொல்
தாமேதான் பொன்னகர மிதற்கீடுண்டோ
    தாரணியில் சேடனவன் சொல்லொண்ணாதே.

விளக்கவுரை :


393. சொல்லவென்றா லின்னமொரு மார்க்கம்பாரு
    துரைராச சுந்தரனே சொல்லக்கேளும்
நல்லதொரு அயோத்திக்கு மேற்கேயப்பா
    நலமான புல்லாணி தீர்த்தமுண்டு
வெல்லவே தீர்த்தமது நடுமையத்தில்
    வேதாந்தக் கூடமென்னும் மாளியுண்டு
புல்லவே திருமூலக் கூட்டத்தார்கள்
    புகழான கோட்டைக்குள் ளிருப்பார்தாமே.

விளக்கவுரை :


394. இருப்பாரே திருமூல வர்க்கத்தார்கள்
    எழிலாக யெண்ணாயிரம் மாந்தரப்பா
பொறுப்பான யவர்மரபு மெத்தவுண்டு
    புகழான திருமாலிக் கோட்டைக்குள்ளே
குருக்கள்மார் சிலதுபேர் முன்னேநிற்பார்
    குருவானத் திருமூலத் தீசர்முன்னே
திருப்புலவும் பொங்கனயி னார்களப்பா
    திருவாசல் கோட்டைக்குக் காவலுண்டே.

விளக்கவுரை :


395. காவலுடன் சீடவர்க்க மாயிரம்பேர்
    கனமான திருமூலத் தீசர்முன்னே
ஆவலுடன் ஞானோப தேயம்பெற்று
    அன்புடனே யவர்பாதந் தொழுதுபோற்றி
பாவமது தனையகற்றித் தவசியோர்கள்
    பான்மையுட னணியணியாய்த் தவமிருப்பார்
சாவதுவு மெப்போது மில்லையப்பா
    சட்டமுடன் கற்பங்கொண்டிருப்பார்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 386 - 390 of 12000 பாடல்கள்


386. கோடியாம் பூதங்கள் சூழும்நாடு
    கொற்றவனே வாசமுனி யிருக்கும்நாடு
நீடியே வண்ட ரறியாதநாடு
    நித்திலங்குஞ் சித்தொளிவு யிருக்கும்நாடு
தேடியே சித்தர்முனி ரிடிகள்தாமும்
    திறமுடனே கண்டறிந்த நாடுவாகும்
ஆடியே புலஸ்தியனே யப்பாகேளு
    ஆதி கைலாச நாடென்னலாமே.

விளக்கவுரை :


387. என்னலாம் புலஸ்தியனே யின்னங்கேளு
    எழிலான சித்தர்முனி யிருக்கும்ஸ்தானம்
பன்னவே டில்லிக்கு தெற்கேயப்பா
    பாங்கான சோழவள நாடொன்றுண்டு
முன்னேதான் பெரியோர்கள் சொன்னாப்போல
    மூதுலகோ ரறியாத ஸ்தலமொன்றுண்டு
பொன்னேகேள் மன்னவனே ராஜயோகா
    பொங்கமுடன் சித்தர்களுக் குகந்தநாடே.

விளக்கவுரை :


388. நாடான சோழவள நாடப்பாகேள்
    நலமான நடுமையந் தன்னிலப்பா
கூடான குன்றதுபோல் மலையொன்றுண்டு
    குறிப்பான யேழு யோசனைதானுண்டு
பாடான மலைக்குள்ளே சுனையொன்றுண்டு
    பாங்கான வாயிரம் படிதானுண்டு
தாடாண்மை யுள்ளதொரு செனகரப்பா
    தண்மையுடன் சுரங்கமதி லிருப்பார்தாமே.

விளக்கவுரை :


389. இருப்பாரே வெகுகோடி சித்தரப்பா
    எழிலான சுரங்கத்தின் படியின்மேலே
பொருப்பான ஒவ்வொரு சித்துதாமும்
    பொங்கமுடன் படிதோறுந் தவசிருப்பார்
விருப்பகலுங் கோட்டையது யெழுநூறுகாதம்
    வீருள்ள சூரியனைக் கண்டதில்லை
துருப்பான பொறுப்பளவு திரவியங்கள்
    துப்புரவாய்க் கொட்டிருக்கக் காணலாமே.

விளக்கவுரை :


390. காணலாம் வெகுகோடி செம்பொன்னப்பா
    கருத்துடனே சித்தர்முனி ரிடிகள்தாமும்
தோணவே தேடிவைத்த திரவியங்கள்
    தொல்லுலகை விலைமதிக்குங் கோடாகோடி
நாணவே நவரத்தின கசிதமெல்லாம்
    நாதாக்கள் தேடிவைத்த நெடுங்காலவைப்பு
பூணவே பொன்னி னாபரணமெல்லாம்
    புகழாகக் குவிந்திருக்கப் பார்க்கலாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்


381. காணவென்றால் கைலாயங் காணவேண்டும்
    காணாட்டால் கோபுரத்தைக் காணவேண்டும்
பூணவே சித்தொளிவு முனிதானப்பா
    பொங்கமுடன் றானிருக்குங் கோபுரந்தான்
வேணபடி சித்தர்கள்தான் யிருக்கும்ஸ்தானம்
    விருப்பமுடன் யானுரைத்தேன் மைந்தாகேளு
தோணவே தடாகமென்று அதிலேயுண்டு
    தோற்றமுடன் மஞ்சள் தாமரையுண்டாமே.

விளக்கவுரை :


382. உண்டாமே மனோன்மணியா ளிருக்கும்பொய்கை
    ஓகோகோ நாதாக்கள் வணங்கும்பொய்கை
அண்டர்முனி ராட்சதர்கள் நடுங்கும்பொய்கை
    அழகான மண்டபந்தான் மத்திபத்தில்
குண்டலம்போல் வயிரக்கல் லிங்கமுண்டு
    கூறான வஞ்சுதலை நாகமுண்டு
சண்டமா ருதம்போல தொனிகள்கேட்கும்
    சட்டமுள்ள தேவாதி ஸ்தலமென்பாரே.

விளக்கவுரை :


383. என்பாரே வயோத்திக்கு வடக்கேயப்பா
    எழிலான நதியொன்று மலையொன்றுண்டு
குன்றான மலைதனிலே சுனையொன்றுண்டு
    குருக்களாஞ் சித்துவர்க்க சேனையுண்டு
வென்றிடுவார் ராட்சதாள் கூட்டமப்பா
    வீரமுனி லாடமுனி கறுப்பன்சாமி
நன்றான பிடாரிமுதல் தேவதைகள்கூட்டம்
    நலமான மலையோரம் நிற்பார்பாரே.

விளக்கவுரை :


384. பாரேதான் டில்லிக்கு மேற்கேயப்பா
    பாங்கான வளர்நாடு சித்துநாடு
நேரேதான் பூமிக்குள் சுரங்கமப்பா
    நெடுந்தூர மாயிரமாங் காதங்காணும்
சூரமுனி சித்துகளும் ரிடிகள்கூட்டம்
    சொற்பெரிய வகிலமென்ற கோட்டைதன்னில்
ஊரேதான் பாதாள பூமியாகும்
    உத்தமனே சித்தர்முனி வாசம்பாரே.

விளக்கவுரை :


385. வாசமாங் கோட்டைக்குப் பூதங்காவல்
    வளம்பெரிய கோட்டைநக ரெல்லாஞ்சுத்தி
பாசமுடன் கிடாரங்கள் கோடாகோடி
    பார்தீர்ந்து வைத்ததுபோல் நிற்கும்பாரு
நேசமுடன் யார்சென்று யெடுத்தாலுந்தான்
    நேர்மையுடன் பூதங்க ளறைந்துகொல்லும்
மோசமது வருகுமல்லோ முனிவர்தாமும்
    முசியாமல் காத்திருந்தார் கோடியாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம் 376 - 380 of 12000 பாடல்கள்


376. தானான சதுரமது கோட்டையுண்டு
    தருவான ராட்சதர்க ளிருக்குங்கோட்டை
கானாறு குகையுண்டு மலைவளங்கள்
    கடிதான ராட்சதர்கள் தூங்குங்காடு
வேனான வெளிக்காடு மண்டபங்கள்
    வேதமுனி ரிடிக்கூட்ட மனேகமுண்டு
தேனான மணிபோன்ற சித்துதாமும்
    சிறப்புடனே தானிருக்கும் பதியுமாமே.

விளக்கவுரை :


377. பதியான நர்மதா நதிக்குத்தெற்கே
    பாங்கான வக்கினியா றொன்றுவுண்டு
மதியான சூரியரும் காணாநாடு
    மகத்தான வெள்ளானை யிருக்கும்நாடு
துதியான சிவலிங்கம் வளருநாடு
    துப்புரவாய் வகிலமெல்லாம் லிங்கப்பிரேஷ்டை
நிதிவிளையும் காஞ்சனமா மென்னுநாடு
    நிலையான சித்தர்முனி யிருக்கும்நாடே.

விளக்கவுரை :


378.  நாடான டில்லிக்கு வடக்கேயப்பா
    நலமான புலஸ்தியனே சொல்வேன்பாரீர்
காடான காடுவாயிரங் காதந்தான்
    கதீதமுள்ள சிங்கமது உறங்குங்காடு
நீடான வேங்கையது வடர்ந்தகாட்டில்
    நேர்மையுடன் நடுமைய மத்திபத்தில்
கோடான கோடிமுனி ரிடிகள்தாமும்
    குறிப்புடனே வீற்றிருக்கும் விடுதியாமே.

விளக்கவுரை :


379. விடுதியாம் ஆயக்கால் மண்டபந்தான்
    விண்ணுலகை யெட்டுகின்ற கோபுரந்தான்
படுநிலையில் ஒவ்வொரு பீடந்தன்னில்
    பாங்குடனே வீற்றிருப்பார் முனிவர்தாமும்
அடுநிலையில் சிகரம்வரை முடிவுமட்டும்
    அணியணியாய் வீற்றிருப்பார் ரிடிகள்தாமும்
முடியோடே முடிநெருங்கும் நாதர்கூட்டம்
    மூதுலகில் சொல்வதற்கு நாவொண்ணாதே.

விளக்கவுரை :


380. ஒண்ணாது கோபுரத்தை யளவுசொல்ல
    உத்தமனே யாதிசேட னாலுமாகா
அண்ணாந்து பார்த்தாலும் முடிதான்போகும்
    ஆகாகா சித்தருட கோபுரந்தான்
கண்ணாலே பார்ப்பதற்கு முடியாதப்பா
    கைலங்கிரி வாசலது யிதற்கீடுண்டோ
குண்ணான மகம்மேரு விதற்கீடுண்டோ
    கொற்றவனே கோபுரத்தின் பெருமைகாணே.

விளக்கவுரை :

Powered by Blogger.