சிவவாக்கியம் 131 - 135 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 131 - 135 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

131. காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.

விளக்கவுரை :

132. எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ?
அங்கும்இங்கு மாய்இரண்டு தேவரே இருப்பரோ?
அங்கும்இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ?
வங்கவாரம் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

விளக்கவுரை :

[ads-post]

133. அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;
முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?

விளக்கவுரை :

134. சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே?  

விளக்கவுரை :

135. மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal