சிவவாக்கியம் 226 - 230 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 226 - 230 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

226. அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

227. அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

[ads-post]

228. ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.

விளக்கவுரை :

229. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே!

விளக்கவுரை :

230. சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal