சிவவாக்கியம் 431 - 435 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 431 - 435 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

431. ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல்
பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர்.

விளக்கவுரை :

432. பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே.

விளக்கவுரை :

[ads-post]

433. எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே.

விளக்கவுரை :

434. திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில்
நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே.

விளக்கவுரை :

435. இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal