சிவவாக்கியம் 331 - 335 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 331 - 335 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

331. ஆகிகூவென் றேஉரைத்த அட்சரத்தின் ஆனந்தம்
யோகியோகி என்பர்கோடி உற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்கும்மங்கும் இங்குமாய்
ஏகம்ஏக மாகவே இருப்பர்கோடி கோடியே.

விளக்கவுரை :

332. கோடிகோடி கோடிகோடி குவலயத்தோர் ஆதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்த்
தேடிதேடி தேடிதேடித் தேகமும் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே.

விளக்கவுரை :

[ads-post]

333. கருத்திலான் வெளுத்திலான் பரன்இருந்த காரணம்
இருத்திலான் ஒளித்திலான் ஒன்றும்இரண்டும் ஆகிலான்
ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான்
கருத்தில்கீயும் கூவும்உற்றோன் கண்டறிந்த ஆதியே.

விளக்கவுரை :

334. வாதிவாதி வாதிவாதி வண்டலை அறிந்திடான்
ஊதிஊதி ஊதிஊதி ஒளிமழுங்கி உளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவான்
சாதிசாதி சாதிசாதி சகாரத்தைக் கண்டிடான்.

விளக்கவுரை :

335. ஆண்மைஆண்மை ஆண்மைஆண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபம் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையாகி நரலைவாயில் நங்குமிங்கும் அங்குமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal