சிவவாக்கியம் 436 - 440 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 436 - 440 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

436. கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.

விளக்கவுரை :

437. தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே.

விளக்கவுரை :

[ads-post]

438. சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே.

விளக்கவுரை :

439. திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே.

விளக்கவுரை :

440. அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்
உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal