சிவவாக்கியம் 451 - 455 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 451 - 455 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

451. அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே.

விளக்கவுரை :

452. ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம்
போனவே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ?
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே.

விளக்கவுரை :

[ads-post]

453. உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்
உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே.

விளக்கவுரை :

454. கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே.

விளக்கவுரை :

455. நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal