சிவவாக்கியம் 386 - 390 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 386 - 390 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

386. வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
ஓடிநின்று உருவெடுத்து உகாரமாய் அலர்ந்ததும்
ஆடிஆடி அங்கமும் அகப்படக் கடந்தபின்
கூடிநின்று உலாவுவமே குருவிருந்த கோலமே.

விளக்கவுரை :

387. விட்டடி விரைத்ததோ அவ்வேர்உருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனும் ஈரேழ்லோகம் கண்டதோ?
தட்டுருவம் ஆகிநின்ற சதாசிவத்து ஒளியதோ
வட்டவீடு அறிந்தபேர்கள் வானதேவர் ஆவரோ.

விளக்கவுரை :

[ads-post]

388. வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவர் அத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீடு அறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்கள் ஆனவே.

விளக்கவுரை :

389. பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின்
மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும்
பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே.

விளக்கவுரை :

390. உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்?
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal