சிவவாக்கியம் 146 - 150 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 146 - 150 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

146. உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்தது எங்ஙனே?
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்கள் எங்ஙனே?
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறது எங்ஙனே?
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே!

விளக்கவுரை :

147. ஆதிஉண்டு அந்தம்இல்லை அன்றுநாலு வேதம் இல்.
சோதிஉண்டு சொல்லுமில்லை சொல்லிறந்த தேதுமில்;
ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
ஆதிஅன்று தன்னையும் யார்அறிவது அண்ணலே?

விளக்கவுரை :

[ads-post]

148. புலால்புலால் புலால் அதென்று பேதமைகள் பேசுகிறீர்?
புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே?
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பேருலாவும் தானுமாய்ப்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன்காணும் அத்தனே!

விளக்கவுரை :

149. உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?

விளக்கவுரை :

150. உண்டகல்லை எச்சில்என்று உள்ளெறிந்து போடுகிறீர்;
கண்டஎச்சில் கையலோ பரமனுக்கும் வேறதோ?
கண்டஎச்சில் கேளடா, கலந்தபாணி அப்பிலே
கொண்டசுத்தம் ஏதடா? குறிப்பிலாத மூடரே!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal