சிவவாக்கியம் 441 - 445 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 441 - 445 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

441. ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே.

விளக்கவுரை :

442. ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே.

விளக்கவுரை :

[ads-post]

443. அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே
பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே.

விளக்கவுரை :

444. சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே.

விளக்கவுரை :

445. திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம்
பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal