சிவவாக்கியம் 471 - 475 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 471 - 475 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

471. என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன்
என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்
என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே.

விளக்கவுரை :

472. இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே.

விளக்கவுரை :

[ads-post]

473. புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே.

விளக்கவுரை :

474. அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

475. தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal