சிவவாக்கியம் 186 - 190 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 186 - 190 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

186. நல்லவெள்ளி ஆறதாய் நயந்தசெம்பு நாலதாய்
கொல்லுநாகம் மூன்றதாய் குலாவுசெம்பொனி ரண்டதாய்
வில்லின்ஓசை ஒன்றுடன் விளங்கஊத வல்லீரேல்
எல்லைஒத்த சோதியானை எட்டுமாற்ற லாகுமே.

விளக்கவுரை :

187. மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகள்;
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்;
மனத்தகத்து அழுக்கறுத்த மவினஞான யோகிகள்
பிணத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

விளக்கவுரை :

[ads-post]

188. உருவும்அல்ல ஒளியும் அல்ல ஒன்றதாகி நின்றதே
மருவும்அல்ல கந்தம்அல்ல மந்தநாடி உற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும்ஆவி தானும்அல்ல
அரியதாக நின்றநேர்மை யாவர்காண வல்லிரே.

விளக்கவுரை :

189. ஓரெழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே
ஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்
மூவெழுத்து மூவராய் மூண்டெழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே.

விளக்கவுரை :

190. ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந்து பூதமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்ஐந் தெழுத்துமாய்
ஆதிஅந்த மூலவிந்து நாதம்மேவி நின்றதும்
ஆதிஅந்த மூலவிந்து நாதமே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal