சிவவாக்கியம் 151 - 155 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 151 - 155 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

151. ஓதிவைத்த நூல்களும் உணர்ந்துகற்ற கல்வியும்
மாதுமக்கள் சுற்றுமும் மறக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ எங்குமாகி நின்றதோ?
சோதிபுக் கொளித்தமாயம் சொல்லடா சுவாமியே!

விளக்கவுரை :

152. ஈணெருமையின் கழுத்தில் இட்டபொட்ட ணங்கள்போல்
மூணுநாலு சீலையில் முடிந்தவழ்க்கும் மூடர்காள்,
மூணுநாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணிஊணி நீர்முடித்த உண்மைஎன்ன உண்மையே?

விளக்கவுரை :

[ads-post]

153. சாவல்நாலு குஞ்சதஞ்சு தாயதான வாறுபோல்
காவலான கூட்டிலே கலந்துசண்டை கொள்ளுதே!
கூவமான் கிழநரியக் கூட்டிலே புகுந்தபின்
சாவல்நாலும் குஞ்சதஞ்சும் தான் இறந்து போனவே!

விளக்கவுரை :

154. மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!

விளக்கவுரை :

155. செம்பினில் களிம்புவந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பிவெம்பி வெம்பியே மெலிந்துமேல் கலந்திட
செம்பினில் களிம்புவிட்ட சேதிஏது காணுமே!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal