சிவவாக்கியம் 141 - 145 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 141 - 145 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

141. நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!

விளக்கவுரை :

142. காலைமாலை தம்மிலே கலந்துநின்ற காலனார்
மாலைகாலை யாச்சிவந்த மாயம்ஏது செப்பிடீர்?
காலைமாலை அற்றுநீர் கருத்திலே ஒடுங்கினால்
காலைமாலை ஆகிநின்ற காலன்இல்லை இல்லையே.

விளக்கவுரை :

[ads-post]

143. எட்டுமண்ட லத்துளே இரண்டுமண்டலம் வளைத்து
இட்டமண்ட லத்துளே எண்ணிஆறு மண்டலம்
தொட்டமண்ட லத்திலே தோன்றிமூன்று மண்டலம்
நட்டமண்ட லத்துளே நாதன்ஆடி நின்றதே!

விளக்கவுரை :

144. நாலிரண்டு மண்டலத்துள் நாதன்நின்றது எவ்விடம்?
காலிரண்டு மூலநாடி கண்டதங்கு உருத்திரன்;
சேலிரண்டு கண்கலந்து திசைகள் எட்டுமூடியே
மேலிரண்டு தான்கலந்து வீசிஆடி நின்றதே.

விளக்கவுரை :

145. அம்மைஅப்பன் உப்புநீர் அறிந்ததே அறிகிலீர்;
அம்மைஅப்பன் உப்புநீர் அரிஅயன் அரனுமாய்
அம்மைஅப்பன் உப்புநீர் ஆதியாதி ஆனபின்
அம்மைஅப்பன் நின்னைஅன்றி யாரும்இல்லை ஆனதே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal