சிவவாக்கியம் 426 - 430 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 426 - 430 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

426. ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ?
எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

427. இந்தஊரில் இல்லைஎன்று எங்குநாடி ஓடுறீர்?
அந்தஊரில்ஈசனும் அமர்ந்து வாழ்வது எங்ஙனே?
அந்தமான பொந்திலாறில் மேவிநின்ற நாதனை
அந்தமான சீயில்அவ்வில் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

[ads-post]

428. புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை ஆக்கிராணன் சூழ்ந்திடில்
அக்குமணியும் கொன்றைசூடி அம்பலத்துள் ஆடுவார்
மிக்கசோதி அன்புடன் விளம்பிடாது பின்னையே.

விளக்கவுரை :

429. பின்னெழுந்த மாங்கிசத்தைப் பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பின் என்றலோ
அன்பராய் இருந்தபேர்கள் ஆறுநீந்தல் போல்வீடே.

விளக்கவுரை :

430. விட்டிருந்த தும்முளே விசனமற்று இருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசல்ஒன்று
கட்டிவைத்த வாசலும் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான ஈசனைத் தெளியுமாங் கிசத்துளே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal