சிவவாக்கியம் 371 - 375 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 371 - 375 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

371. வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம்.

விளக்கவுரை :

372. அடிதொடக்கி முடியளவும் ஆறுமா நிலம்கடந்து
அப்புறத்தில் வெளிகடந்த ஆதிஎங்கள் சோதியை
உடுபதிக்கண் அமுதருந்தி உண்மைஞான உவகையுள்
உச்சிபட்டு இறங்குகின்ற யோகிநல்ல யோகியே.

விளக்கவுரை :

[ads-post]

373. உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டும் என்கிறீர்
உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாசலைத் திறந்து காணவேண்டும் மாந்தரே.

விளக்கவுரை :

374. முத்திசித்தி தொந்தமாம் முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுஉதித்த ஐம்புலன்கள் ஆகுமத்தி அப்புலன்
அத்தர்நித்தர் காள்கண்டர் அன்பினால் அனுதினம்
உச்சரித்து உளத்திலே அறிந்துணர்ந்து கொண்மினே.

விளக்கவுரை :

375. மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த்
தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal