சிவவாக்கியம் 446 - 450 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 446 - 450 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

446. பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன்
பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே.

விளக்கவுரை :

447. கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ?
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே.

விளக்கவுரை :

[ads-post]

448. முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ?
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே.

விளக்கவுரை :

449. கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே.

விளக்கவுரை :

450. எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்
அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal