சிவவாக்கியம் 416 - 420 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 416 - 420 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

416. தந்தையாய் தருமம்நீ சகலதே வதையும்நீ
சிந்துநீ தெளிவும்நீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய் வேதம்நீ
எந்தைநீ இறைவன்நீ என்னை ஆண்ட ஈசனே.

விளக்கவுரை :

417. எப்பிறப்பி லும்பிறந்து இறந்துஅழிந்த ஏழைகாள்
இப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீர்
அப்புடன் மலம்அறுத்தே ஆசைநீக்க வல்லீரேல்
செப்புநாத ஓசையில் தெளிந்துகாணல் ஆகுமே.

விளக்கவுரை :

[ads-post]

418. எட்டுயோகம் ஆனதும் இயங்குகின்ற நாதமும்
எட்டுஅக்க ரத்துளே உகாரமும் அகாரமும்
விட்டலர்ந்து மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய்
அட்ட அட்சரத்துளே அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

419. பிரான்பிரான் என்றுநீர் பிதற்றுகின்ற மூடரே
பிரானைவிட்டு எம்பிரான் பிரிந்தவாறது எங்ஙனே?
பிரானுமாய்ப் பிரானுமாயப் பேருலகந் தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணும் உம்முடல்.

விளக்கவுரை :

420. ஆதியில்லை அந்தமில்லை ஆனநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் அஞ்செழித்தும் இல்லையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal