சிவவாக்கியம் 381 - 385 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 381 - 385 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

381. கருத்தரித்து உதித்தபோது கமலபீடம் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காரணங்கள் ஆனதும்
கருத்தரித்து உதித்தபோது காண்இரண்டு கண்களாய்க்
கருத்தினின்று உதித்ததே கபாலம் ஏந்தும் நாதனே.

விளக்கவுரை :

382. ஆனவன்னி மூன்றுகோணம் ஆறிரண்டு எட்டிலே
ஆனசீவன் அஞ்செழுத்து அகாரமிட்டு அலர்ந்ததும்
ஆனசோதி உண்மையும் அனாதியான உண்மையும்
ஆனதாய் தானதாய் அவலமாய் மறைந்திடும்.

விளக்கவுரை :

[ads-post]

383. ஈன்றெழுந்த எம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கும் ஆயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரம் கடந்தபின்
ஈன்றெழுந்த அவ்வினோசை எங்குமாகி நின்றதே.

விளக்கவுரை :

384. எங்கும்எங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகமும் ஒன்றலோ?
அங்கும்இங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ?
தங்குதாபரங்களும் தரித்தவாரது ஒன்றலோ?
உங்கள்எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

385. அம்பரத்தில் ஆடும்சோதி யானவன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததே
அம்பரக் குழியிலே அங்கமிட்டு ருக்கிட
அம்பரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal