சிவவாக்கியம் 376 - 380 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 376 - 380 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

376. வெளியுருக்கி அஞ்செழுத்து விந்துநாத சந்தமும்
தளியுருக்கி நெய்கலந்து சகலசுத்தி ஆனதும்
வெளியிலும் அவ்வினையிலும் இருவரை அறிந்தபின்
வெளிகடந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

377. மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.

விளக்கவுரை :

[ads-post]

378. முப்புறத்தில் அப்புறம் முக்கண்ணன்வினைவிலே
சிற்பரத்துள் உற்புனம் சிவாயம்அஞ் செழுத்துமே
தற்பரம் உதித்துநின்ற தாணுஎங்கும் ஆனபின்
இப்புறம் ஒடுங்குமோடி எங்கும்லிங்கம் ஆனதே.

விளக்கவுரை :

379. ஆடிநின்ற சீவன்ஓர் அஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ, குலாவிநின்ற மூலமோ?
நாடுகண்டு நின்றதோ, நாவுகற்ற கல்வியோ?
வீடுகண்டு விண்டிடினி வெட்டவெளியும் ஆனதே.

விளக்கவுரை :

380. உருத்தரித்த போதுசீவன் ஒக்கநின்ற உண்மையும்
திருத்தமுள்ளது ஒன்றிலும் சிவாயம்அஞ் செழுத்துமாம்.
இருத்துநின்று உறுத்தடங்கி ஏகபோகம் ஆனபின்
கருத்தினின்று உதித்ததே கபாலம்ஏந்தும் நாதனே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal