சிவவாக்கியம் 476 - 480 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 476 - 480 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

476. கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

477. காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.

விளக்கவுரை :

[ads-post]

478. அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர்.

விளக்கவுரை :

479. எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?
கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே!

விளக்கவுரை :

480. தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல்
தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal