சிவவாக்கியம் 396 - 400 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 396 - 400 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

396. அவ்வுதித்த அட்சரத்தின் உட்கலந்த அட்சரம்
சவ்வுதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்,
உவ்வுதித்தது அவ்வுமாய் உருத்தரித்தது உண்மையே.

விளக்கவுரை :

397. அகாரமென்னும் அக்கரத்தில் அக்கரம் ஒழிந்ததோ?
அகாரமென்னும் அக்கரத்தில் அவ்வுவந்து உதித்ததோ?
உகாரமும் அகாரமும் ஒன்றிநன்று நின்றதோ?
விகாரமற்ற ஞானிகாள், விரிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

[ads-post]

398. சத்தியாவது உன்னுடல், தயங்குசீவன் உட்சிவம்
பித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே.
சுத்திஐந்து கூடம்ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமும் ஆகிநின்று தண்மையாவது உண்மையே.

விளக்கவுரை :

399. சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மேட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரிக்கும் மந்திரம் ஓம்நம சிவாயமே.

விளக்கவுரை :

400. அக்கரம் அனாதிஅல்ல ஆத்துமம் அனாதிஅல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதிஅல்ல
தக்கமிக்க நூல்களும் சாத்திரமும் அனாதிஅல்ல
ஒக்கநின்று உடன்கலந்த உண்மைகாண் அனாதியே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal