சிவவாக்கியம் 351 - 355 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 351 - 355 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

351. அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.

விளக்கவுரை :

352. சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே
அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே
இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே
நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே.

விளக்கவுரை :

[ads-post]

353. அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார்.

விளக்கவுரை :

354. பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.

விளக்கவுரை :

355. சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal