சிவவாக்கியம் 156 - 160 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 156 - 160 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

156. நாடிநாடி நம்முளே நயந்துகாண வல்லீரேல்
ஓடிஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பிரே!

விளக்கவுரை :

157. பிணங்குகின்றது ஏதடா? பிரக்ஞைகெட்ட மூடரே?
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்.
பிணங்கும்ஓர் இருவினைப் பிணக்கறுக்க வல்லீரேல்!
பிணங்கிலாத பெரியஇன்பம் பெற்றிருக்க லாகுமே!

விளக்கவுரை :

[ads-post]

158. மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்?
மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்
மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,
மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும்.

விளக்கவுரை :

159. ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம்நீங்கள் ஆற்றலோ?
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது?

விளக்கவுரை :

160. அக்கிடீர் அனைத்துயிர்க்கும் ஆதியாகி நிற்பது
முக்கிடீர் உமைப்பிடித்து முத்தரித்து விட்டது,
மைக்கிடீர் பிறந்துஇறந்து மாண்டுமாண்டு போவது,
மொக்கிடீர் உமக்குநான் உணர்த்துவித்தது உண்மையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal