சிவவாக்கியம் 136 - 140 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 136 - 140 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

136. தூமைஅற்று நின்றலோ சுதீபமுற்று நின்றது?
ஆண்மைஅற்று நின்றலோ வழக்கமற்று நின்றது?
தாண்மைஅற்று ஆண்மைஅற்று சஞ்சலங்கள் அற்றுநின்ற
தூமைதூமை அற்றகாலம் சொல்லும்அற்று நின்றதே!

விளக்கவுரை :

137. ஊறிநின்ற தூமையை உறைந்துநின்ற சீவனை
வேறுபேசி மூடரே விளைந்தவாறது ஏதடா?
நாறுகின்ற தூமையல்லோ நற்குலங்கள் ஆவன?
சீறுகின்ற மூடனே அத்தூமைநின்ற் கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

138. தீமைகண்டு நின்றபெண்ணின் தூமைதானும் ஊறியே
சீமைஎங்கும் ஆணும்பெண்ணும் சேர்ந்துலகம் கண்டதே.
தூமைதானும் ஆசையாய் துறந்திருந்த சீவனை
தூமைஅற்று கொண்டிருந்த தேசம்ஏது தேசமே?

விளக்கவுரை :

139. வேணும்வேணும் என்றுநீர் வீண்உழன்று தேடுவீர்?
வேணும்என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே,
வேணும் என்று தேடுகின்ற வேட்கையைத் துறந்தபின்
வேணும்என்ற அப்பொருள் விரைந்துகாணல் ஆகுமே!

விளக்கவுரை :

140. சிட்டர்ஓது வேதமும் சிறந்ததாக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்றமெய்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பொட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்!

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal