சிவவாக்கியம் 266 - 270 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 266 - 270 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

266. ஏகமுத்தி மூன்றுமுத்தி நாலுமுத்தி நன்மைசேர்
போகமுற்றி புண்ணியத்தில் முத்திஅன்றி முத்தியாய்
நாகமுற்றி சயனமாய் நலங்கடல் கடந்ததீ
யாகமுற்றி ஆகிநின்ற தென்கொலாதி தேவனே.

விளக்கவுரை :

267. மூன்றுமுப்பது ஆறினோடு மூன்றுமூன்று மாயமாய்
மூன்றுமுத்தி ஆகிமூன்று மூன்றுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுசோதி மூன்றுதாய் துலக்கமில் விளக்கதாய்
ஏன்றெனாவின் உள்புகுந்த தென்கோலோ நம்ஈசனே.

விளக்கவுரை :

[ads-post]

268. ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அல்லவற்றுள் ஆயுமாய்
ஐந்துமூன்றும் ஒன்றுமாகி நின்றஆதி தேவனே
ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய் அமைந்தனைத்து நின்றநீ
ஐந்தும்ஐந்தும் ஆயநின்னை யாவர்காண வல்லரே.

விளக்கவுரை :

269. ஆறும்ஆறும் ஆறுமாய் ஓர்ஐந்தும்ஐந்தும் ஐந்துமாய்
ஏறுசீர் இரண்டுமூன்றும் ஏழும்ஆறும் எட்டுமாய்
வேறுவேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும்ஓசை யாய்அமர்ந்த மாயமாம் மாயனே.

விளக்கவுரை :

270. எட்டும்எட்டும் எட்டுமாய் ஓர்ஏழும் ஏழுமாய்
எட்டும் ஒன்றும் மூன்றுமாகி நின்றஆதி தேவனே
எட்டுமாய பாதமோடு இறைஞ்சி நின்றவண்ணமே
எட்டெழுத்தும் ஓதுவார்கள் அல்லல்நீங்கி நிற்பரே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal