சிவவாக்கியம் 356 - 360 of 525 பாடல்கள்


சிவவாக்கியம் 356 - 360 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

356. சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.

விளக்கவுரை :

357. நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்
கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.

விளக்கவுரை :

[ads-post]

358. வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே.

விளக்கவுரை :

359. தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே.

விளக்கவுரை :

360. தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal