சிவவாக்கியம் 221 - 225 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 221 - 225 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

221. சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே.

விளக்கவுரை :

222. உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.

விளக்கவுரை :

[ads-post]

223. எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே?

விளக்கவுரை :

224. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,
அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே.

விளக்கவுரை :

225. வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம்
முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ,
எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal