சிவவாக்கியம் 461 - 465 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 461 - 465 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

461. தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே.

விளக்கவுரை :

462. மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே
வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே.

விளக்கவுரை :

[ads-post]

463. வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்
நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர்.

விளக்கவுரை :

464. ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.

விளக்கவுரை :

465. அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal