சிவவாக்கியம் 191 - 195 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 191 - 195 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

191. அன்னம்இட்ட பேரெலாம் அனேககோடி வாழவே
சொன்னமிட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம்இட்ட பேரேலாம் வீழ்வர்வெந் நரகிலே
கன்னம்இட்ட பேரெலாம் கடந்துநின்றல் திண்ணமே!

விளக்கவுரை :

192. ஓதொணாமல் நின்றநீர் உறக்கம்ஊணும் அற்றநீர்
சாதிபேதம் அற்றநீர் சங்கையின்றி நின்ற நீர்
கோதிலாத அறிவிலே குறிப்புணர்ந்து நின்றநீர்
ஏதும்இன்றி நின்றநீர் இயங்குமாறு எங்ஙனே?

விளக்கவுரை :

[ads-post]

193. பிறந்தபொது கோவணம் இலங்குநூல் குடுமியும்
பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூலி உடங்கெலாம்
மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?
நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?

விளக்கவுரை :

194. துருத்தியுண்டு கொல்லனுண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாம் மனத்தில்உன்னித் திகழஊத வல்லீரேல்,
பெருத்ததூண் இலங்கியே பிழம்பதாய் விரிந்திடும்
நிருத்தமான சோதியும் நீயும்அல்லது இல்லையே.

விளக்கவுரை :

195. வேடமிட்டு மின்துலக்கி மிக்கதூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள்போலும் பண்ணுறீர்
தேடிவத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூசை பூசைஎன்ன பூசையே?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal