சிவவாக்கியம் 466 - 470 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 466 - 470 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

466. தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

467. உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

[ads-post]

468. வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே.

விளக்கவுரை :

469. தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்
உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்
பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே.

விளக்கவுரை :

470. பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா
கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal