சிவவாக்கியம் 391 - 395 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 391 - 395 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

391. வாயிலிட்டு நல்லுரிசை அட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியும் அங்கொம்பிலே உலர்ந்ததும்
ஆயிலிட்ட காயமும் அனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

392. அட்சரத்தை உச்சரித்து அனாதியங்கி மூலமாய்
அட்சரத்தை யும்திறந்து அகோரமிட்டு அலர்ந்ததும்
மட்சரத்தில் உட்கரம் அகப்படக் கடந்தபின்
அட்சரத்தில் ஆதியோடு அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

393. கோயிலும் குளங்களும் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்,
ஆயனை அரனையும் அறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினும் தகப்பனோடு தான்அமர்ந்தது ஒக்குமே.

விளக்கவுரை :

394. கோயில் எங்கும் ஒன்றலோ, குளங்கள்நீர்கள் ஒன்றலோ?
தேயுவாயு ஒன்றலோ, சிவனும்அங்கே ஒன்றலோ?
ஆயசீவன் எங்குமாய் அமர்ந்துதவாரது ஒன்றலோ?
காயம்ஈதறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே.

விளக்கவுரை :

395. காதுகண்கள் மூக்குவாய் கலந்தவாரது ஒன்றலோ?
சோதியிட்டு எடுத்ததும் சுகங்கள்அஞ்சும் ஒன்றலோ?
ஓதிவைத்த சாத்திரம் உதித்தவாரது ஒன்றலோ?
நாதவீடு அறிந்தபேர்கள் நாதர்ஆவர் காணுமே.

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal