சிவவாக்கியம் 421 - 425 of 525 பாடல்கள்



சிவவாக்கியம் 421 - 425 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

421. அம்மையப்பன் அப்பன்நீர் அமர்ந்தபோது அறிகிலீர்
அம்மையப்பன் ஆனநீர் ஆதியான் பாசமே
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை ஆனபின்
அம்மையப்பன் நின்னைஅன்றி யாருமில்லை இல்லையே.

விளக்கவுரை :

422. முந்தஓர் எழுத்துளே முளைத்தெழந்த செஞ்சுடர்
அந்தஓர் எழுத்துளே பிறந்துகாயம் ஆனதும்
அந்தஓர் எழுத்துளே ஏகமாகி நின்றதும்
அந்தஓர் எழுத்தையும் அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

[ads-post]

423. கூட்டம்இட்டு நீங்களும் கூடிவேதம் ஓதுறீர்
ஏட்டகத்துள் ஈசனும் இருப்பதென்ன எழுத்துளே?
நாட்டம் இட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மைஆணை உண்மையே.

விளக்கவுரை :

424. காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆனதே.

விளக்கவுரை :

425. ஓசைஉள்ள கல்லைநீர் உடைத்திரண்டாய் செய்துமே
வாசலில் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசைக்கு வைத்தகல்லில் பூவும்நீரும் சாத்துறீர்
ஈசனுக்கு உகந்தகல் எந்தக்கல்லு சொல்லுமே?

விளக்கவுரை :

சிவவாக்கியர், சிவவாக்கியம், சித்தர் பாடல்கள், sivavakkiar, sivavakkiam, siththarkal