போகர் சப்தகாண்டம் 3186 - 3190 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3186 - 3190 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3186. தூக்கையிலே தூக்கமது வதிகங்காணா தொல்லுலகில் மூலிவகைசமனதாக
ஏக்கமுடன் மூலவகை ரெட்டிப்பாக எழிலான சூரணமாய் செய்துகொள்ள
நோக்கமுடன் ரவிதனிலே காயப்போடு நுணுக்கமுடன் கல்லுரலில் மாவதாக்கி
பாக்கவேதான் சூரணத்தை சுத்திசெய்து பசும்பாலில் புட்டாவி செய்திடாயே

விளக்கவுரை :


3187. செய்யவென்றால் கைபாகம் செய்பாகங்கேளு செப்புகிறேன் தளவாயாஞ் சட்டிதன்னில்
பையவே யாவியின்பால் பாண்டுமிட்ள பாகமுடன் சூரணத்தை சீலைமேலே 
மொய்யவே புட்போல பிசறிவைத்து முசியாமல் மேல்சட்டிகொண்டுமூட
வெய்யவே தானெரிப்பாய் கண்டமட்டும் என்மகனே தானெரிப்பாய் புகலக்கேளே

விளக்கவுரை :

[ads-post]

3188. கேளேதான் ரவிதனிலே காயப்போடு கெணிதமுடன் இப்பாகம்பத்துப்போடு
கோளேதான் வாராமல் சூரணத்தை கொப்பஎனவே தானெடுத்து செப்பக்கேளு
பாளேதான் நேராமல் சீனிசேர்த்து பதமுடனே மண்டலந்தான் கொண்டாயானால்
நாளேதான் தேகமது கற்றூணாகும் நளினமுடன் போகரிஷி நவின்றவாரே

விளக்கவுரை :


3189. வாறான கற்பமென்ற சூரணத்தை வாகுடனே கொள்பனுஞ் சித்தனாவார்
நேறான சீனபதி மாந்தருக்கு நேர்மையுடன் தானுரைத்த கற்பமாகும்
சீறான கற்பமது வுண்டபேர்க்கு தேசத்தில் வயதல்லோ லக்கோயில்லை
காரான கடந்தமுனி சித்தனென்பார் காயாதிகற்பத்தின் பான்மைதானே

விளக்கவுரை :


3190. தானான கற்பமது வுண்ணும்போது சதாகாலம் நிஷ்டையிலே இருக்கலாகும் 
வேனான கற்பத்திற் குறுதிசொல்வேன் வெளியங்க மாகவல்லோ திரியவேண்டாம்
பானுமதி சூரியனும் பார்க்கவொண்ணா பாலகனே யொடுக்கமதில் இருக்கவேண்டும்
தேனான புளிபுகையுந் தள்ளவேண்டும் தேசமதில் காயத்தை நிறுத்துவாயே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar