6331. அறுகுமே பாஷாணகற்பத்தாலே
எழிலான கற்பமது கொண்டபேர்க்கு
குறுகியே தேகமது
வயிரம்போலாம் குவலயத்தில் சித்துமுனி தம்மைப்போலே
அறுவதுவும் மிகவாகி
புத்தியுண்டாய் அவனியிலே நீயுமொரு சித்தனாவாய்
நறுவலென்ற திரைநரையும்
அற்றுப்போகும் நாதாந்த சித்தொளிவு நிதியுமாச்சே
விளக்கவுரை :
6332. சித்தான சித்துமுனி
ரிஷிகளெல்லாம் தேசமதில் பலபலவாய் நூல்கள்கூறி
முத்தான பாஷாண கற்பஞ்சொல்ல
மூதுலகில் மறைத்துவைத்தார் சித்தரெல்லாம்
சத்தசாகரங்கடந்து
குளிகைபூண்டு சாயுச்சிய பதவிதனைக் காணவென்று
புத்தியுடன் காலாங்கி
தாள்பணிந்து புகழான கற்பமதைக் கூறிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
6333. கூறினேன் கற்பமதைக்
கொண்டபேர்க்கு குவலயத்தில் நெடுங்கால மிருக்கலாகும்
மாறிட்ட மேனியது தங்கம்போலாம்
மகத்தான வாசியது மேல்நோக்காது
நின்றிட்ட மேனியது
தவளம்போலாம் நிட்களங்க வாசியது மேலோடாது
வீறிட்டு வார்த்தையது
மொழிசொன்னாலும் வீணாகித் தேகமது குண்ணாதன்றே
விளக்கவுரை :
6334. அன்றான புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே சொல்லுகிறேன் உந்தமக்கு
குன்றான மலையேறி குகைகடந்து
கூறான சுவர்ணகிரி பதியமர்ந்து
வென்றிடவே குளிகையது
பூண்டுகொண்டு வீறான சிகரமென்ற பதியைக்கண்டேன்
தென்றிசையில்
தட்சணாமூர்த்திநாயன் தோற்றமுடன் கண்டதொரு கூர்மந்தானே
விளக்கவுரை :
6335. தானான கூர்மமது
தன்னைக்கண்டென் தாக்கான திரேதாயி னுகத்திலப்பா
மானான பிரளயங்கள் வந்தபோது
மகத்தான கூர்மமது மலையிற்சென்று
தேனான மனோன்மணியாள்
இருக்கும்பீடம் தெரிசனமே செய்வதற்கு மனதிலுன்னி
பானான பார்லோகப் பிரளயத்தில்
பட்சமுடன் கூர்மமது வந்ததாச்சே
விளக்கவுரை :