போகர் சப்தகாண்டம் 6341 - 6345 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6341 - 6345 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6341. தருகவே வயிற்றிலுள்ள காயகற்பம் தண்மையுடன் மனதுவந்து அடியேன்தானும்
பெருகவே யான்வாங்கி மண்டலந்தான் பேரான குளிகைதனில் குன்றியுண்ண
மெருகலுடன் தேகமது இறுகியல்லோ மேதினியில் நெடுங்கால மிருப்பதற்கு
பொருகவே காயாதி கற்பங்கொண்டு பேறான வுலகுதனில் வசித்திட்டேனே

விளக்கவுரை :


6342. வசித்ததொரு குளிகையினால் எந்தனுக்கு வாகான மகிமைகளு மனேகமுண்டு
பசியதுவு மில்லையப்பா பண்புள்ளோனே பாலகனே சித்தர்களுக் கிடைக்குமோசொல்
நிசிதமுள்ள காயாதி கற்பந்தன்னை நிகழ்ச்சியுடன் முன்னிருந்த நாதர்தாமும்
உசிதமுடன் கண்டவரும் யாருமில்லை வுத்தமனே நாதாக்கள் சொல்லார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

6343. சொல்லாரே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் சுவர்ணமென்ற மலையிலப்பா மேற்பாகத்தில்
வெல்லவே குளிகைகொண்டு வடியேன்தானும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
புல்லவே வனந்தனிலே கலைமான்தன்னை புகழ்ச்சியுடன் அடியேனுங் கண்டபோது
நல்லதொரு கலைமானும் என்னைக்கண்டு நலமுடனே ஓடிவந்து பணியலாச்சே

விளக்கவுரை :


6344. பணிந்துமே எந்தனிட பாதம்போற்றி பட்சமுடன் எந்தனையும் வினவிகேட்க
துணிந்துமே காலாங்கி நாதர்பாதம் துப்புரவாய் மனதுவந்து அடியேன்தானும்
அணிகடனின் பதாம்புயத்தின் சீஷனென்றேன் ஆத்தாளின் கடைபாத தூளியென்றேன்
மணிபோன்ற வார்த்தையது கூறும்போது மகத்தான என்குருவே என்னலாச்சு

விளக்கவுரை :


6345. என்னவே காலாங்கி நாதசீஷா எழிலாக எந்தனுக்கு வந்தசாபம்
பன்னவே புஜண்டரிஷியார்தாமும் பாங்கான கானகத்தில் யாகஞ்செய்ய
துன்னவே யடியனால் வந்தநேர்மை துப்புரவாய் யாதென்று வினவிக்கேட்பீர்
முன்னமே பெரியோர்கள் செய்தயாகம் மூதுலகில் அடியேனும் அறியேன்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar