போகர் சப்தகாண்டம் 3001 - 3005 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 3001 - 3005 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3001. ஓடியே சதாசிவன்தான் பாதங்காப்பு வுரைத்திடுவேன் போகரேழாயிரத்தில்
தேடியே சத்தசாகரமதாக திறமாகப் படிவைத்தேன் சத்தகாண்டம்
கூடியே காலாங்கி நாதர்பாதம் குருவான நாதாக்கள் பாதம்போற்றி
ஆடியே வயித்தியமாம் நாலாங்காண்டம் அப்பனே வாதமது காப்பதாமே

விளக்கவுரை :


3002. தானான சத்தசாகரமுங் கண்டேன் தானான சத்ததீவுகளுங் கண்டேன் 
வேனான சத்தநதி தானுங்கண்டேன் வேகமுடன் அஷ்டதிக்கு தானும்கண்டேன்
கோனான அஷ்டபாலகரைக் கண்டேன் கொடிதான அஷ்டதேவாலயங் கண்டேன்
பானான பராபரியை மனதிலெண்ணி பாங்குபெற பாடிவிட்டேன் மகிமைபாரே

விளக்கவுரை :

[ads-post]

3003. பாரேதான் குளிகையது பூண்டுகொண்டு பண்புடனே சீனபதிசென்றேன்யானும்
நேரேதான் சீனபதி மூன்றுகாதம் நேர்மையுடன் சுத்திவந்து வுளவுகண்டேன்
சீரேதான் பூமிவளம் யானுங்கண்டேன் சிறப்பான அவர்பூமியிதுவேயாகும்
கூரேதான் நாதாக்கள் கண்டதில்லை கொற்றவனே யான்கண்டேன் பூநீராமே

விளக்கவுரை :


3004.  ஆமேதான் பூநீரின் வளப்பங்கேளிர் அகிலமெலாம் பூநீர்கள் மெத்தவுண்டு
தாமேதான் பாண்டிவளமெத்தநாடு தாக்கான யாவடையார் பிரம்மதேசம்
நாமேதான் கண்டபடி சேரநாடு நாதாக்கள் சோழவள மெடுப்பார்பூமி
போமேதான் நெடுங்காலம் தன்னிற்சென்று பொங்கமுடன் தானெடுப்பார் பூநீராமே

விளக்கவுரை :


3005. பூநீரில்ன்னம் வெகுதளமுஞ்சொல்வேன் புகழான காளஸ்திரி சிவகெங்கைதானும்
பூநீராம் பாலுவனம் பூம்பாறையாகும் புகழான திண்டுக்கல் பசுமலையுமாகும்
சோநீராந் தில்லைவனம் காளிங்கமடுவு சொர்ணமென்ற பூமியது வடமதுரையாகும்
தேநீரான் தென்மதுரை வயோத்திநகராகும் தெளிவான பொன்னகரந் தானுமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar