6151. கோடான சுழியென்ற மூலியப்பா
கொற்றவனே கொண்டுவந்து சொல்லக்கேளும்
தாடான மூலிரசந் துலமேயாகும்
தாக்கான வீரமது வராகனொன்று
கூடான சூதமது விராகனொன்று
கொற்றவனே மூன்றையுந்தான் ஒன்றாய்க்கூட்டி
வாடாமல் வெண்ணையது போலரைத்து
வளமான செம்பதனில் பூசிடாயே
விளக்கவுரை :
6152. பூசவே மயினமதை செம்புதன்னில்
புகழாக வேபித்து காய்ந்தபின்பு
வாசமுடன் கரியோட்டி
லிட்டுமைந்தா வளமையுடன் சில்லிட்டுச் சீலைசெய்து
பாசமது தானகல ஆவியில்வைத்து
பட்சமுடன் கோழியென்ற புடத்தைப்போடு
கோசமென்ற பீஜமது சேர்ந்ததாலே
கொற்றவனே செம்பதுவும் வர்ணமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6153. ஆச்சப்பா செம்பதுவும்
வர்ணமீறி வப்பனே மாற்றதுவும் ஐம்பதாகும்
மாச்சலென்ற களிம்பதுவும்
விட்டகன்று மகத்தான செம்பதுவும் பழுப்புமீறி
காச்சலுடன்
திரைசுவடுகளிம்போடூரல் கசடகற்றி சவளையுடன் அழுகன்மாறி
ஆச்சரியமானதொரு
வூட்டங்காய்ப்பு வப்பனே கரகரப்புட னயப்புதானே
விளக்கவுரை :
6154. தானான பிறவியென்ற தங்கம்போலே
தண்மையுள்ள குற்றமது நீங்கியேதான்
கோனான குருதங்கம்
பிறவித்தங்கம் குவலயத்தில் நாதாக்கள் செய்யும் தங்கம்
மானான மகமேருவான தங்கம்
மகத்தான மூலியுட காரசாரம்
தேனான பரிசமது பட்டபோது
தெளிவான வுறுதியென்ற தங்கந்தானே
விளக்கவுரை :
6155. தங்கமாம் அதிதனிலே
நூற்றஉக்கொன்று தாக்கடா சோடசமுங் காணும்காணும்
வங்கமாம் படுபாவி யானவங்கம்
வளமான வரணமதைக்கொள்ளாதப்பா
புங்கமாம் அஷ்டசித்தி
யிதற்குள்ளாகும் புகழான தங்கமது பிறவித்தங்கம்
பங்கமது வாராது நாதத்தங்கம்
பாருலகில் மாண்பருக்கு கிட்டாதன்றே
விளக்கவுரை :