6156. அன்றான விதியாளி வருவானானால்
அவனுக்கே கிட்டுமது மற்றோர்க்கில்லை
குன்றான மலைநாடு
தேசந்தன்னில் கொற்றவருஞ் சிவயோகி மாண்பருண்டு
தென்றிசையில் அகஸ்தியனார்
மலையிலப்பா தீரமுடன் சென்றுவந்தோர் கோடியுண்டு
வென்றிடவே
யவர்களிலுங்கருமியுண்டு வேதாந்த சிவயோகி தானுமுண்டே
விளக்கவுரை :
6157. உண்டான மனோலயத்தை யறிந்துகொண்டு வுத்தமனே நூல்பார்த்த வாதியுண்டு
கண்டாலும் விள்ளாத காணியாளர்
கசடகற்றி மனம்பொருந்தி கருத்திலுன்னி
அண்டர்முனி தேவாதி
ரிஷிகட்கொப்பாய் வப்பனே முற்பவத்தை யகற்றிவாழும்
சண்டமெனும் மாருதம்போல்
பாசம்விட்டு சட்டமுடன் வாழுகின்ற யோகியாமே
விளக்கவுரை :
[ads-post]
6158. யோகியாந் தத்துவத்தில்
மிகுந்தவானாய் யோகமெனும் பதிதனக்குகந்த சீஷன்
போகமது தானகற்றி
பொதிந்துவாழும் பொங்கமுடன் ஞானமென்ற மாண்பர்கண்டு
ரோகமது இல்லாத புண்ணியவானாய்
நொடிக்குள்ளே பகுத்தறிவு கொண்டதீரன்
காகமது நேராத சீஷன்கண்டு
சட்டமுடன் உபதேசஞ் செய்குவீரே
விளக்கவுரை :
6159. செய்யவே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் செயலான புலிப்பாணி வதிதவானே
துய்யதமிழ் பாண்டியனுக்
கொப்பதான துரைராஜ சுந்தரனே புகலக்கேளும்
வையகங்கள் தான்புகழும்
வனாந்திரத்தில் வண்மையுள்ள சிவந்தகொடி வேலியப்பா
மெய்யான மலைதனிலே
மெத்தவுண்டு மேதினியுளோர் காண்பதுவு மரிதுமாமே
விளக்கவுரை :
6160. பாரேதான் மலைதனிலே
சுற்றும்போது பாங்கான பாறையின்தன் வெப்புதன்னில்
நேரேதான் விளைந்திருக்கும்
சிவந்தமூலி நெடிதான கொடிவேலி யென்னலாகும்
சீரேதான் கொடிவேலி
தனையெடுத்து சிறப்புடனே சூதமதை யெடுத்துமைந்தா
வீரேதான் வீரமது
களஞ்சிகூட்டி நீதியுடன் மத்தித்து ரவியிற்போடே
விளக்கவுரை :