6161. போடவே சீலையது
வலுவாய்ச்செய்து பொங்கமுடன் கனயெருவிற் புடத்தைப்போடு
நீடவே புடமாறி எடுத்துப்பாரு
நிலையான செம்பதுவும் என்னசொல்வேன்
கூடவே செம்புதனைப்
பதனம்பண்ணு கொற்றவனே கலசகுண்டலத்துக்காகும்
ஆடவே மாற்றதுவும்
இருபத்தைந்து வப்பனே குங்குமப்பூ நிறமுமாச்சே
விளக்கவுரை :
6162. ஆச்சுதென்று விடுகாதே
யின்னங்ககேளு ஆகாகா நாதாக்கள் மறைத்தஜோதி
வாச்சுதே சிவயோகிக்குகந்த
தங்கம் வர்ணதங்க மிதற்கல்லோ யீடாமோதான்
போச்சுதென்று விடுகாதே
புண்ணியவானே புகழான நாதாக்கள் ஆடுங்கூத்து
காச்சதே சிவந்த
சித்திரமாமூலி கனகமென்ற வேதையது கைக்குள்ளாச்சே
விளக்கவுரை :
[ads-post]
6163. உள்ளான பொருளெல்லாம்
இதிலேதோயும் வுத்தமனே நாதாக்கள் கூறாரப்பா
கள்ளமின்றி நேராக யேமவித்தை
காசினியில் சித்துமுனி செய்யும் மார்க்கம்
எள்ளளவும் பிசகதுவும்
வாராதப்பா எழிலான வித்தையது என்னசொல்வேன்
கொள்ளைகொண்ட குருவினது
வாக்குதானும் குவலயத்தில் பொய்யாது மெய்யதாமே
விளக்கவுரை :
6164. மெய்யான சிவந்த
சித்திரமாமூலி மேதினியில் வெகுமாண்பர் காணாமற்றான்
பொய்யான மூலிதனை
மெய்யென்றெண்ணி பொங்கமுடன் கெட்டலைந்தார் கோடிகோடி
துய்யதமிழ் சாத்திரங்கள்
கூறும்வண்ணம் துப்புறவாய் தலைமாடு கால்மாடாக
செய்யதொரு காப்பேடு
காணாமற்றான் சேனைதிரள் மாண்பர்களும் கெட்டார்தாமே
விளக்கவுரை :
6165. கெட்டாரே சிவந்த சித்திரமாமூலி கெடியான வையகத்தில் காணாமற்றான்
பட்டலைந்து மலைவளங்கள்
குன்னுநாடு பாருலகில் தேடியல்லோ காணாமற்றான்
அட்டகிரி தான்புகழும்
மேடுதன்னில் வன்பான மூலிதனைக் கண்டறிந்து
விட்டகுறை யிருந்ததொரு
தன்மையாலே மேதினியில் சிலபேர்கள் கண்டார்தாமே
விளக்கவுரை :