6211. மூடவே ரவியென்ற
வெயில்தன்னில் முனையான காடியென்ற பாண்டந்தன்னை
நீடியே நாள்தோறும்
அருணன்முன்னில் நிலையான பாண்டமதை வெயிலில்வைத்து
சாடியென்ற பாண்டமதில்
ஜலமுந்தானும் தாக்கான ரவியினிலே சுண்டுமட்டும்
கூடியதோர் ஜலமதனைக் காய்ச்சி
மைந்தா கொற்றவனே குறைவுக்கு விட்டிடாயே
விளக்கவுரை :
6212. விட்டிடவே நாள்தோறும்
குறைவுமட்டும் வீரான காடியென்ற பாண்டந்தன்னில்
கொட்டளவு வெந்நீரை யாறவைத்து
குறையாமல் நாள்தோறும் இப்படியேவாரு
சட்டமுடன் பாணடமதை
யாறுதிங்கள் சாங்கமுடன் தினந்தோறும் ரவியில்வைத்து
திட்டமுடன் ராக்காலம்
பனியில்வைக்க தீர்க்கமுடன் செய்குவது பாகமாமே
விளக்கவுரை :
[ads-post]
6213. பாகமாங் காடியென்ற
பாண்டந்தன்னை பரிதிமுன்னே தினந்தோறும் வைக்கும்போது
நாகமது சீரியதோர்
விஷத்தைப்போல நாதாந்த காடிக்குக் காரமேறி
வேகமுள்ள சரக்குக்குக்
காலனாச்சு வேகாத சரக்கெல்லாம் வெந்துநீரும்
யூகமுடன் காலாங்கி
பாதம்போற்றி வுத்தமனே காடியது வழிசொன்னேனே
விளக்கவுரை :
6214. சொன்னதொரு காடிதன்னை
யாறுதிங்கள் துப்புரவாய் ரவிதனிலே வைக்கும்போது
நன்னயமாய் நாதாக்கள்
செய்பாகந்தான் நலமான பழச்சாறு என்னலாச்சு
வின்னமது நேராது
முப்புமார்க்கம் விள்ளார்கள் சித்துமுனி ரிஷிகள்தேவர்
பன்னவே சாத்திரத்தில்
சூட்சமுப்பு பாடவில்லை சித்தர்களும் பாடார்தானே
விளக்கவுரை :
6215. தானான ஆதியென்ற முப்புதன்னை
தண்மையுள்ள பதினெண்பேர் சித்துதாமும்
மானான சாத்திரத்தில்
சூட்சமாக மார்க்கமுடன் முடிக்கும்வகை சொல்லார்தாமும்
கோனான குருநூலாம்
சத்தகாண்டம் கூறினேன் போகரேழாயிரத்தில்
பானான சூட்சமென்ற
முப்புதன்னை பாருலகில் மாண்பருக்கு பாடினேனே
விளக்கவுரை :