6241. அகலான பாண்டமது
தன்னில்வைத்து வப்பனே சீலையது வலுவாய்ச்செய்து
பகலான ரவிதனிலே காயப்போடு
பாங்குடனே காய்ந்தபின்பு செப்பக்கேளு
நிகலவே கோழியென்ற
புடந்தான்போடு நிஷ்களங்கமாகவல்லோ நீறிப்போகும்
புகலவே பற்பமதை பதனம்பண்ணு
புகழான மனோன்மணிக்கு பூசைசெய்யே
விளக்கவுரை :
6242. பூசையாம் மனோன்மணியாள் ஆராதாரம் பொங்கமுடன் தான்செய்து எடுத்துமைந்தா
ஆசையது கொள்ளாது
வருண்மைந்தாகேள் வப்பனே சீசாவிற் பதனம்பண்ணு
காசுபணம் தேடுதற்கு
உரிமைகேளு கனமான பாஷாணம் பலந்தானொன்று
மாசுபடா முப்பூவும்
பலந்தான்காலாய் மார்க்கமுடன் கல்வமதில் போட்டிடாயே
விளக்கவுரை :
[ads-post]
6243. போட்டவுடன் சரக்கதுவும்
ஒன்றாய்க்கூட்டி பொங்கமுடன் முன்னுரைத்த காடிநீரால்
வாட்டமுடன் தானரைப்பாய்
சாமமப்பா வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே
காய்ந்தபின்பு நீதியுடன் முன்சொன்ன மார்க்கம்போலே
தேட்டமுடன் புடமதுவுங் கோழிபார்
தெளிவுடனே போடுவதும் முறைதான்கேளே
விளக்கவுரை :
6244. முறையான புடமதுவும்
ஆறிப்பின்பு முனையான பற்பமதை யெடுத்துமைந்தா
நிறைபோடு வணுவளவுங்
குறையுமில்லை நீட்டமுடன் பற்பமது பாரமெத்த
குறையாது பாஷாணமென்ன
சொல்வேன் குவலயத்தில் சித்துமுனி கூறாவண்ணம்
அறைந்தேனே உலகுபதி
மாண்பருக்கு வப்பனே சிவயோக தலத்தில்நில்லே
விளக்கவுரை :
6245. நிற்கையிலே மனோன்மணியாள்
மனதுவந்து நிஷ்களங்கமாகவல்லோ வுனக்குமைந்தா
சொற்பமென்ற வாதமது
பலிக்கும்பாரு சுந்தரனே வுன்னைப்போல சித்துமுண்டோ
அற்பமென்று நினையாதே
துய்யபாலா வருண்மைந்தா முப்பாலே யெல்லாஞ்சித்தி
விற்பனர்கள் கொண்டாடும்
இந்தவேதை மேதினியில் சமுசாரிக்கானவாறே
விளக்கவுரை :