6236. சுண்ணமாமின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் சுந்தரனே ரகுபாலா புண்யவானே
வண்ணமுடன் கல்லுப்பு
பெரிதாய்க்கொண்டு வளமுடனே படியதுவும் தானெடுத்து
திண்ணமுடன் பாண்டமதில்
இட்டுமைந்தா தீர்க்கமுடன் முன்சொன்ன காடிநீரை
நண்ணமுடன் மறுபாண்டந்
தன்னிலப்பா நலமுடனே ஜலமதனை படிதான்வாரே
விளக்கவுரை :
6237. வார்க்கையிலே முன்சொன்ன
காடிநீர்தான் வளமான பாண்டமதில் இட்டுமைந்தா
தீர்க்கமுடன் தான்கலக்க
தெளுவிறுத்து தீரமுடன் பாண்டமதை யடுப்பிலேற்றி
ஏர்க்கவே யுப்பதுவும்
பூர்க்குமட்டும் எழிலான வுப்பதனைக் காய்ச்சியல்லோ
சேர்க்கவே மறுபடியுங்
காடிவிட்டு சிறப்புடனே கலக்கியதை யெடுத்திடாயே
விளக்கவுரை :
[ads-post]
6238. எடுத்திடவே யிப்படியே
பத்துமுறைக்காச்சு எழிலான கல்லுப்பும் குருவுப்பாகும்
கெடுத்திடா வண்ணமது பீங்கான்தன்னில்
கிருபையுடன் பதனமது மிகவாய்ச்செய்து
தொடுப்பதற்கு முன்போலே
வுப்பைநன்றாய் சுத்தமுடன் சேர்க்கும்வகை விபரங்கேளு
அடுத்துமே முன்சொன்ன
கைபாகந்தான் அப்பனே முறைபாடு கூறுவேனே
விளக்கவுரை :
6239. கூறவே முப்பென்ற
மார்க்கந்தன்னை குவலயத்தில் மாண்பர்களுந் தெளிவதாக
ஆறவே முன்சொன்ன
வழலைமார்க்கம் வப்பனே பலமதுவும் எடுத்துக்கொண்டு
மாறவே பிரமமென்ற முப்புதன்னை
மார்க்கமுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
தேறவே கல்லுப்புச்
சுன்னந்தன்னை தேற்றமுடன் பலமதுவும் ஒன்றாய்க்கூட்டே
விளக்கவுரை :
6240. கூட்டியே மூன்றையுந்தான்
ஒன்றாய்க்கூட்டி குறிப்புடனே வீரமுடன் புழுகுதானும்
தேட்டமுடன் வார்கனது
ரெண்டேயாகும் தெளிவுடனே முன்சொன்ன காடிதன்னை
வாட்டமுடன் தானரைப்பாய் நாலுசாமம்
வளமான பில்லையது லகுவாய்ச்செய்து
நீட்டமுடன் ரவிதனிலே
காயவைத்து நிஷ்களங்கமானதொரு வகலில்வையே
விளக்கவுரை :