6231. எரித்துமே பச்சையென்ற
காடிநீரால் ஏற்றமுடன் தானலம்பி ரவியிற்போடு
மரித்துமே பிரம்மமென்ற
கல்தானப்பா மகத்தான எண்ணையது கக்கிப்போச்சு
குரித்தபொருள் பிரமமென்ற
சுன்னக்கல்தான் கூரான தேகமது வதிகங்கொண்டு
தெரிந்துமே பொடிப்பொடியாம்
தகடுபோலாம் வெளிவான சுன்னத்துக் கிடந்தானாச்சே
விளக்கவுரை :
6232. ஆச்சென்று விடுகாதே
யின்னங்கேளு வப்பனே காலாங்கி சொன்னநீதி
காச்சலென்ற சுன்னமதைத்
தானெடுத்து கருவான கல்வமதி லிட்டுமைந்தா
மாச்சலென்ற சிற்றண்டங்
கருதானப்பா மகத்தான பிரமக்கல் சுன்னந்தன்னை
வீச்சுடனே தானரைப்பாய்
மடியுமட்டும் வீறான சுன்னமதை பில்லைசெய்யே
விளக்கவுரை :
[ads-post]
6233. செய்யவே சிறுபில்லை காசதாக
செம்மலுடன் ரவியுலர்த்தி சொல்வேன்பாரீர்
துய்யதொரு பில்லைமுகந்
தானுலர்ந்து துப்புரவாய் மூசையிட்டு சீலைசெய்து
வையகத்தே தானிருக்கும்
கருமமான வளமான பாகமதை யறியாமற்றான்
கைபாகந்தவறாமல் மைந்தாநீயும்
கருத்துடனே வுலையில்வைத்து வூதுவாயே
விளக்கவுரை :
6234. ஊதவே சுன்னமது வாகுமாகும் உத்தமனே மூசையது வழுகுமட்டும்
நீதமுடன் ஊதிடவே சுன்னமாகும்
நிலையான சுன்னமது பிரம்மக்கல்லாம்
தோதமுடன் மூசைதனை
யுடைத்துப்பாரு சுந்தரனே சுன்னமது பிரமக்கல்லாம்
சாதமது தான்கொடுக்கும்
சுக்கான்கல்லாம் சட்டமுடன் நாதாக்கள் பெருமைபாரே
விளக்கவுரை :
6235. பாரேதான் சுன்னமென்ற
பிரமக்கல்லை பாங்குடனே பீங்கானிற் பதனம்பண்ணு
நேரேதான் சரக்குக்குக்
கேறலாச்சு நெடிதான பிரமக்கல்லென்ற சுன்னம்
ஆரோதான்
முடிப்பார்களப்பாகேளு ஆதியென்ற சுன்னமதை முடியாரப்பா
சீரேதான் சாத்திரத்தின்
உளவாராய்ந்து சிறப்புடனே பார்த்துவைத்த சுண்ணமாமே
விளக்கவுரை :