6226. பாரேதான் பூநீறு சுத்திசெய்து பாகமுடனெடுப்பதற்கு வகையைக்கேளும்
நேரேதான் பூநீரு படிதானப்பா
நிலையான முன்சொன்ன காடிதானும்
சீரேதான் பூநீரில்
விட்டுமைந்தா சிறப்புடனே கலக்கியதை தெளுநிறுத்து
கூரேதான் ரவிதனிலே காயவைத்து
கொப்பெனவே யுப்பதனை யெடுத்திடாயே
விளக்கவுரை :
6227. எடுத்துமே யிப்படியே
பத்துமுறை கலக்கி யெளிதான ரவிதனிலே காயவைத்து
தொடுத்ததொரு வுப்பதனைப்
பதனம்பண்ணு தோறாமல் பத்துமுறை செய்தவுப்பை
கெடுத்திடா வண்ணமது பீங்கான்
தன்னில் கவனமுடன் பதனமாய்ச் செய்துகொண்டு
நடுத்தெருவாங் கருமியென்ற
மாண்பருக்கு நவிலாதே நவின்றிட்டால் சாபமாமே
விளக்கவுரை :
[ads-post]
6228. சாபமா மின்னமொரு
மார்க்கங்கேளு தப்பாது காலாங்கி வாக்குதானும்
பாபமது நேராது புண்யவானே
பாருலகில் சித்துமுனி சொல்லார்தாமும்
கோபமது கொண்டல்லோ
முனிவர்தாமும் கூறாரே சிவமுப்பு சூட்சந்தன்னை
தாபமுடன் மனோன்மணியாள்
கடாட்சத்தாலே சாங்கமுடன் அடியேனும் நவின்றிட்டேனே
விளக்கவுரை :
6229. இட்டதொரு பிரம்மக்கல்
தனையெடுத்து எழிலான கருப்பதனை நீக்கிமைந்தா
குருசொல் வாக்குபோல
துறைமுகமுங் கண்டறிந்து பளிங்குக்கல்லாம்
சட்டமுடன் கல்லதனை
யிடித்துமைந்தா சாங்கமுடன் பச்சையென்ற
பூநீர்தன்னை திட்டமுடன்
கல்லுக்கு ரெண்டேயாகும் தீரமுடன் தான்கலந்து பாண்டம்வையே
விளக்கவுரை :
6230. பாண்டமது தனிலமைத்து
பாகங்கேளிர் பாங்காக முன்னரைத்த காடிநீரை
வேண்டியே பூநீறுக்கரைதானப்பா
விருப்பமுடன் பாண்டமதிலூட்டு மைந்தா
தூண்டியதோர் கருமான
மிரண்டும்வேக துப்புரவாய்க் காடியென்ற நீரினாலே
மாண்டிடவே தானெரிப்பாய்
காடிநீர்தான் மார்க்கமுடன் கண்டமட்டும் எரித்திடாயே
விளக்கவுரை :