6246. வாரான பற்பமது
போக்குசொல்வேன் வளமான வெள்ளீயந் தன்னைத்தானும்
கூரான சேரதுதான் ஒன்றேயாகும்
குறிப்புடனே தானுருக்கி செப்பக்கேளும்
நீரான பாஷாண பற்பந்தன்னை
நீமகனே வராகனிடை காலதாக
சேரோடும் வெள்ளீயம்
உருக்கியல்லோ செம்மலுடன் பற்பமதைத் தாக்கிடாயே
விளக்கவுரை :
6247. தாக்குவாய் வெள்ளீயம்
பற்பத்தாலே தண்மையுள்ள நீரதுவும் உரிந்துகொள்ளும்
வாக்குடனே காலாங்கி
மொழிபொய்யாது வளமையுடன் போகரேழாயிரந்தான்
நோக்கமுடன் நீர்வடிந்து
வெள்ளிதன்னை நுணுக்கமுடன் வருமைவருங் காலந்தன்னில்
ஏக்கமது கொள்ளாமல்
வெள்ளிதன்னை யெளிதாக சமுசாரி யுண்ணலாமே
விளக்கவுரை :
[ads-post]
6248. உண்ணவென்றால்
சாபமதுயாதுமில்லை வுத்தமனே சரக்குவறுபத்துநான்கும்
திண்ணமுடன் இம்முறைபோல்
செய்வாயப்பா தீரமுடன் சரக்குவறுபத்துநான்கும்
வண்ணமுடன் நிற்றுதற்கு
பிசகோயில்லை வளமான முப்பூவின் சுன்னமப்பா
சுன்னமுடன் முப்பூவின்
காரத்தாலே நலமான சரக்கெல்லாம் நீறிப்போமே
விளக்கவுரை :
6249. நீறுமே சூதமென்ற
சரக்குதானும் நீதியுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு
வீறுடனே
முப்பூவைச்சரியாய்க்கூட்டி வீரமுடன் முன்சொன்ன காடிதன்னால்
மாறுதலும் நேராமல்
பற்பந்தன்னை மார்க்கமுடன் தானரைப்பாய் சூதங்கூட்டி
நூலுடனே கலசமென்ற
பாண்டந்தன்னில் துப்புரவாய் சில்லிட்டுச் சீலைசெய்யே
விளக்கவுரை :
6250. சீலையது எழுசீலைவலுவாய்ச்செய்து சிறப்புடனே ரவிதனிலே காயவைத்து
வாலையென்ற எந்திரமாம்
புவனவாலை வளமான வாலுகையாம் அடுப்புதன்னில்
காலையது ஜாமமது நாலதாக
கருவான சூதமதை எரிப்பாய்நீயும்
மாலையது சூதமதை
எடுத்துப்பார்க்க மகத்தான கடுங்கார சுன்னமாச்சே
விளக்கவுரை :