6251. சுன்னமென்றால் சுன்னமது
என்னசொல்வேன் சுந்தரனே நாதாக்கள் செய்யும்வேதை
வின்னமது வாராது
யிந்தப்போக்கு விருப்பமுடன் செய்வதற்கு மனதுவந்து
அன்னமெனுங் காடியென்ற
பழச்சாரப்பா ஆகாகா சித்துமுனி மறைத்தாரங்கே
சொன்னமது முப்பூவால்
கைக்குள்ளாச்சு சோறாமல் செய்பவர்க்கு சித்தியாமே
விளக்கவுரை :
6252. சித்தியாம் பஞ்சபூத
சரக்கைத்தானும் சிறப்புடனே தானெடுத்து செப்பக்கேளீர்
வெத்தியுடன் முப்பூவை
சரக்குபாதி வேகமுடன் காடியின்தன் பழச்சாற்றாலே
சுத்தியுடன் தானரைத்து
பில்லைசெய்து துப்புரவாய் ரவிதனிலே காயப்போடு
சுத்தியுடன் வோட்டிலிட்டு
சீலைசெய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழிதானே
விளக்கவுரை :
[ads-post]
6253. தானான கோழியது புடமதாக
தண்மையுடன் ஆறினபின் னெடுத்துப்பாரு
கோனான குருசொன்ன வாக்குபோலே
கொற்றவனே பற்பமது தவளம்போலாம்
மானான பற்பமதை எடுத்துமைந்தா
மகத்தான சீசாவில் பதனம்பண்ணு
பானான ரவிமதியில் தாக்கவல்லோ
பாண்மையுடன் சொல்லுகிறேன் பண்பாய்த்தானே
விளக்கவுரை :
6254. பண்பான வெள்ளிசெம்பில்
பத்துக்கொன்னு பாங்குடனே பற்பமதை யொன்றுதாக்க
நண்பான மாற்றதுவும் ஏழதாகும்
நலமான புடமதுவுக்கேகாவர்ணம்
திண்பான பட்டசெம்பு
ஆறுவெள்ளி தீர்க்கமுடன் தான்கொடுக்க மாற்றெட்டாகும்
உண்மையுடன் தங்கமது
நாலுக்கொன்று வுத்தமனே சேர்க்க நலமாகும்பாரே
விளக்கவுரை :
6255. பாரேதான் அவமதுவும்
ஒன்பதாகும் பாங்கான புடத்தங்கம் பிறவித்தங்கம்
சீரேதான் பஞ்சமுகங்
கருத்துக்காணும் சிறப்புடனே மறைத்துவைத்தார் சித்துதாமும்
நேரேதான் சரக்கு
வறுபத்துநான்கு நேர்மையுடன் முன்சொன்ன முப்பூவாலே
வீரேதான் சுன்னமென்ற
முப்பூவாலே விண்ணுலகும் மண்ணுலகும் காணலாமே
விளக்கவுரை :