6266. கிட்டுதற்கு பூவழலையெடுக்கவல்லான் கீர்த்தியுடன் நடராஜனருளேவேண்டும்
தொட்டகுறி போலதுபோல்
காண்பதற்கு துரைராஜர் குருமுறைகள் வேண்டுமப்பா
பட்டமரம் போல்துளுக்கும்
வழலைகாண பராபரியாள் கிருபையது வேண்டுமப்பா
விட்டகுறை யிருந்தாலே
லபிக்கும்பாரு விருதாவாய் மாண்டவர்கோடியாமே
விளக்கவுரை :
6267. கோடியா மனுகோடி ராஜமன்னர்
குவலயத்தில் வழலையுட மார்க்கந்தன்னால்
நாடியே வழலையது
பூர்க்குங்காலம் நலமுடனே கண்டறிய மாளாமற்றான்
ஓடியே யிருமாப்பு
வனப்புவாய்ந்து ஓகோகோ மாண்பரெல்லாம் மடிந்தாரப்பா
நீடியதோர் பொருளதுவும்
விஷகாலந்தான் நிகட்சியுடன் யெடுப்பதற்கு யில்லைதானே
விளக்கவுரை :
[ads-post]
6268. இல்லையே வெகுபேர்கள் மாண்பரப்பா
யெழிலான சாத்திரத்தைப் பாராமற்றான்
அல்லல்படுந் துயரமது
வருமையாலே வன்புடனே பூநீரை எடுப்பதற்கு
தொல்லையெனும் சாத்திரத்தை
முன்பின்னாக சோராமல் பாடிவைத்தார் சித்தர்யாவும்
கல்லுதெய்வம் பேசுமென்று
கையெடுத்து காசினியில் கையுரைத்த காட்சியாமே
விளக்கவுரை :
6269. காட்சியாம் கனகமென்ற
பொருளையப்பா காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு
தாட்சியில்லா சாத்திரங்கள்
கண்டாராய்ந்து தடுமாறி தலைமாறி கலையுமாறி
மாட்சியுடன் கோர்வையென்ற
சாத்திரத்தை மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள்
ஆட்சிபந்தம் வெகுநூல்கள்
சொன்னாருண்டு வப்பனே குருநூல்தான் பாரார்தானே
விளக்கவுரை :
6270. பாராமல் மாண்பரெல்லாம்
பதியுங்கெட்டு பாங்கான சாத்திரத்தின் முறையுங்கெட்டு
நேரேதான் சாத்திரத்தை
விட்டகற்றி நேர்மையுடன் மதியூன்றி பாராமற்றான்
பூராயமானதொரு ரிஷிகள்நூலில்
புகன்றிட்ட மர்மமதை யறியாமற்றான்
சாராயமானதொரு வஸ்துதன்னை
சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே
விளக்கவுரை :