6271. கொண்டாரே லாகிரிகள்
அருந்தியல்லோ கோடான கோடிநூல்கள் மறைத்திட்டார்கள்
விண்டதொரு சாத்திரத்தை
வினயங்கொண்டு வீண்காலம்போக்கியல்லோ மடிந்திட்டார்கள்
தண்டனையாஞ் சாபமது
வுள்ளுமாகி தாரணியில் வெகுபேர்கள் சமைத்திட்டார்கள்
சண்டமாரு போலே சத்தகாண்டம்
சாற்றினேன் போகரேழாயிரமுங்காணே
விளக்கவுரை :
6272. காணவே யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே பூநீரை யெடுக்கும்போது
சுந்தரனே யுந்தனுக்கு பயமுண்டாகும்
வேணதொரு சித்துமுனி
ரிஷிகள்தாமும் வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே
பூணவே வேஷமது மாறாமல்கொண்டு
புகழான முன்னிற்பார் பிரம்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
6273. பாரேதான் வேஷமது
பூண்டுகொண்டு பாங்கான கபாலமது ஏந்திக்கொண்டு
நேரேதான் முன்னாக வந்துநின்று
நேர்மையுடன் ஆங்கார கெர்ச்சிப்போடும்
ஆரோதான் பூநீரை
எடுக்கவல்லான் வாண்பிள்ளை நீதானோவென்று கூறி
தேரோடும் சத்தமனக்
கிரிச்சிபோலும் தேற்றமுடன் சத்தமது கேட்கும்பாரே
விளக்கவுரை :
6274. கேட்டுமே சித்துமுனி யசரீர்வாக்கு கெவனமுடன் கேட்டதுவும் உந்தமக்கு
ஆட்களில்லா வனந்தனிலே
இந்தவோசை வப்பனே வதிசயங்கள் காணுதென்று
நிட்கமுடன் தலையெடுத்துப்
பார்க்கும்போது நிலையான கறுப்பண்ணச்சாமிபோலே
வீட்கமுடன் முன்னிற்கக்
கண்டபோது வித்தகனே பயந்தொடுங்கி சாவார்தானே
விளக்கவுரை :
6275. சாவாரே யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் சட்டமுடன் ஓமென்றவேஷத்தோடும்
ஆவதுபோல் மகமேரு தன்னைப்போலே
கப்பனே ஜடலமது கொண்டுமல்லோ
வேவலுடன் சவுக்கார வழலையாலே
வேதாந்தத் தாயினது வருளினாலே
மேமமுடன் நடுக்கமது
பலமுண்டாய மேதினியில் வெகுமாண்பர் மடிந்தார்தானே
விளக்கவுரை :